ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை குறித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் சரியாக ஆஜராகாமல் ஜெயலலிதா வாய்தா வாங்கி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்துகுவிப்பு வழக்கை மூன்று வாரங்களுக்கு நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். இவ்வழக்கை ஒத்தி வைத்துள்ள நீதிபதி சவுகான் விரைவில் ஓய்வு பெறப்போகிறார்.
மேலும் தலைமை நீதிபதியாக வரப்போகிற லோதா, ஒரு தீர்ப்பை வெளியிட்டிருந்தார். அந்த தீர்ப்பில், தற்போது பதவியில் இருக்கும் லோக்சபா, சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்ட ஓராண்டுக்குள் விசாரணையை முடித்திட வேண்டும்.
இது போன்ற வழக்குகள், பல ஆண்டுகளுக்கு நிலுவையில் இருப்பதால், கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பலரும், தொடர்ந்து பதவியில் நீடித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என்று அந்த தீர்ப்பில் இடம் பெற்றிருந்தது.
தற்போது, அதற்கு நேர்மாறாக மூன்று வாரங்களுக்கு உச்ச நீதிமன்றமே விசாரணைக்கு தடை விதித்திருக்கிறது.
இப்படி வழக்கை தள்ளி போடுவதால் தீர்ப்புகளைத் தள்ளிப்போக செய்யலாமே தவிர தீர்ப்புகளை மாற்றி தப்பிக்க நிச்சயமாக முடியாது. விரைவில் நியாயமான தீர்ப்பு வந்தே தீரும். அப்போது உண்மை ஊருக்கும், உலகிற்கும் புரியும் என்று கூறியுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் சரியாக ஆஜராகாமல் ஜெயலலிதா வாய்தா வாங்கி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்துகுவிப்பு வழக்கை மூன்று வாரங்களுக்கு நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். இவ்வழக்கை ஒத்தி வைத்துள்ள நீதிபதி சவுகான் விரைவில் ஓய்வு பெறப்போகிறார்.
மேலும் தலைமை நீதிபதியாக வரப்போகிற லோதா, ஒரு தீர்ப்பை வெளியிட்டிருந்தார். அந்த தீர்ப்பில், தற்போது பதவியில் இருக்கும் லோக்சபா, சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்ட ஓராண்டுக்குள் விசாரணையை முடித்திட வேண்டும்.
இது போன்ற வழக்குகள், பல ஆண்டுகளுக்கு நிலுவையில் இருப்பதால், கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பலரும், தொடர்ந்து பதவியில் நீடித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என்று அந்த தீர்ப்பில் இடம் பெற்றிருந்தது.
தற்போது, அதற்கு நேர்மாறாக மூன்று வாரங்களுக்கு உச்ச நீதிமன்றமே விசாரணைக்கு தடை விதித்திருக்கிறது.
இப்படி வழக்கை தள்ளி போடுவதால் தீர்ப்புகளைத் தள்ளிப்போக செய்யலாமே தவிர தீர்ப்புகளை மாற்றி தப்பிக்க நிச்சயமாக முடியாது. விரைவில் நியாயமான தீர்ப்பு வந்தே தீரும். அப்போது உண்மை ஊருக்கும், உலகிற்கும் புரியும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment