தடுத்து வைக்கப்பட்டுள்ள விபூசிகா மற்றும் அவரது தாயான ஜெயக்குமாரி இருவரையும் ஒன்று சேர்ப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனக் கோரி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபூசிகாவுக்காக ஒரு முறைப்பாடும், அவரது தாயுக்காக மற்றொரு முறைப்பாடும் ஆணைக்குழுவில் நேற்றுப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட விபூசிகா மற்றும் ஜெயக்குமாரி இருவரும் ஒரு நாள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபூசிகாவின் எதிர்கால வாழ்க்கை கருதி அவரை, அவரது தாயாருடன் இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விபூசிகா சார்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது தயாரான ஜெயக்குமாரியை விடுவிக்க வேண்டும் என்று கோரி மற்றொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 வயதான விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயக்குமாரி இருவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் போலியான காரணங்களை முன்வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
கைதுசெய்யப்பட்ட விபூசிகா மற்றும் ஜெயக்குமாரி இருவரும் ஒரு நாள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபூசிகாவின் எதிர்கால வாழ்க்கை கருதி அவரை, அவரது தாயாருடன் இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விபூசிகா சார்பில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது தயாரான ஜெயக்குமாரியை விடுவிக்க வேண்டும் என்று கோரி மற்றொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 வயதான விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயக்குமாரி இருவரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் போலியான காரணங்களை முன்வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
No comments:
Post a Comment