தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் அண்மையில் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மூவர் வவுனியா நெடுங்கேணிப் பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்த கோபி என்கிற பொன்னையா செல்வநாயகம் கஜீவன் (வயது 32), அப்பன் என்கிற நவரத்தினம் நவநீதன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினரான தேவியான் (வயது 36) ஆகியோரே இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர்.
வவுனியாவின் நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பகுதிகளில் சந்தேக நபர்கள் மூவரும் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவல்களையடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு தரப்பிற்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இராணுவத்தின் துப்பாக்கி பிரயோகத்தின் போது சந்தேகநபர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்த கோபி என்கிற பொன்னையா செல்வநாயகம் கஜீவன் (வயது 32), அப்பன் என்கிற நவரத்தினம் நவநீதன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினரான தேவியான் (வயது 36) ஆகியோரே இராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர்.
வவுனியாவின் நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பகுதிகளில் சந்தேக நபர்கள் மூவரும் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவல்களையடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு தரப்பிற்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இராணுவத்தின் துப்பாக்கி பிரயோகத்தின் போது சந்தேகநபர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment