மங்களகரமான ஜய வருஷப் பிறப்பின் பலன்களை வாசகர்களுக்காக....
பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் கணித்து எழுதியுள்ளார். அவரது விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம்.
மங்களகரமான ஜய வருஷம், உத்தராயனம் வருஷரிது சித்திரை மாதம் 1ம் தேதி(14-04-2014) திங்கட்கிழமையும், சுக்லபக்ஷ சதுர்த்தசியும், ஹஸ்தம் நக்ஷத்ரமும், வியாகாத நாம யோகமும் வணஜீ நாம கரணமும், கன்னியா இராசியும் சந்திர ஹோரையும் மேஷ அம்சையும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 6.05க்கு இராஜஸ மேஷ லக்னத்தில் ஜய வருஷம் ஜெனனம்.
ஜய வருஷ வெண்பா:
ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் - நயமுடனே
அக்கம் பெரிதா மளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்.
ஜய வருஷ ராசிக்கட்டம்
இந்த ஆண்டு ஏற்படும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்:
கேது மேஷ ராசியிலும், குரு மிதுன ராசியில் வக்ரமாகவும், சனி - ராகு துலாமிலும் இருக்கிறார்கள்.
சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார்.
குருபகவான் 13-06-2014 அன்று கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
21-06-2014 அன்று ராகு பகவான் கன்னிக்கும், கேது மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
இதனால் ஏற்படும் லோக பலன்கள்:
நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குரு உச்சஸ்தானத்தில் அமர்வதால் நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். ரியல் எஸ்டேட் துறையில் மிக அசுர வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும்.
பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். இவ்வாண்டு நடைபெறும் அலகாபாத் கும்பமேளா சிறப்பான முறையில் நடந்தாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.
புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள் ஏற்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். ஆனால் அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். புதன்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.
இந்தோனேஷியா, பர்மா, சுமத்ரா, கரீபியன் தீவுகள், கொரியா, ஆஸ்திரேலியா, வட அமேரிக்கா போன்ற இடங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா தேசங்களில் கலவரங்கள் ஏற்பட்டு மறையும். சனியுடன் ராகு இணைந்தும் குரு கேந்திரமும் ஏற்படுவதால் அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். சாதாரண மக்களையும் செல்வந்தனாக்கிவிடும்.
நாட்டில் பல இடங்களில் தெய்வகாரியம், பூஜைகள் விசேஷமாக நடக்கும். தொழில்துறையில் தமிழ்நாடு செழித்து வளரும். அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்த பிரச்னைகள் அனைத்தும் அடங்கிவிடும். காவல்துறை மேலும் வலிமையும் முன்னேற்றமும் வசதிகளும் பெற்று நல்ல புகழ் அடையும்.
உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு இது யோகமான நேரம். உலகில் பல நாடுகள் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும். இயற்கை சீற்றம் – பூகம்ப பாதிப்பு ஏற்படும். பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம். மேலை நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு தலைவலியான நேரம். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு வரலாம். தீவிரவாதத்தால் பிரச்னைகள் வந்தாலும் அடங்கிவிடும். தங்கம் விலை மேலும் அதிரடியாக உயரும்...
பன்னிரு ராசிகளுக்குமான விரிவான பலன்கள் பகுதிகளாகத் தொடர்ந்து இங்கு வெளியாகும். உரிய இராசிகளின் பெயர்கள் மீது அழுத்திப் பலன்களைக் காண்க...
மேடம்
மிதுனம்
கடகம்
ரிஷபம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் கணித்து எழுதியுள்ளார். அவரது விரிவான ஜோதிட பலன்களை இங்கே காணலாம்.
மங்களகரமான ஜய வருஷம், உத்தராயனம் வருஷரிது சித்திரை மாதம் 1ம் தேதி(14-04-2014) திங்கட்கிழமையும், சுக்லபக்ஷ சதுர்த்தசியும், ஹஸ்தம் நக்ஷத்ரமும், வியாகாத நாம யோகமும் வணஜீ நாம கரணமும், கன்னியா இராசியும் சந்திர ஹோரையும் மேஷ அம்சையும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 6.05க்கு இராஜஸ மேஷ லக்னத்தில் ஜய வருஷம் ஜெனனம்.
ஜய வருஷ வெண்பா:
ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் - நயமுடனே
அக்கம் பெரிதா மளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்.
ஜய வருஷ ராசிக்கட்டம்
இந்த ஆண்டு ஏற்படும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்:
கேது மேஷ ராசியிலும், குரு மிதுன ராசியில் வக்ரமாகவும், சனி - ராகு துலாமிலும் இருக்கிறார்கள்.
சனி 21-07-2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார்.
குருபகவான் 13-06-2014 அன்று கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
21-06-2014 அன்று ராகு பகவான் கன்னிக்கும், கேது மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
சனீஸ்வர பகவான் 17-12-2014 அன்று பெயர்ச்சியாகி விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
இதனால் ஏற்படும் லோக பலன்கள்:
நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குரு உச்சஸ்தானத்தில் அமர்வதால் நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். ரியல் எஸ்டேட் துறையில் மிக அசுர வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும்.
பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஏற்படும். இவ்வாண்டு நடைபெறும் அலகாபாத் கும்பமேளா சிறப்பான முறையில் நடந்தாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு.
புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம். மலைவாசஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். நிலச்சரிவுகள் ஏற்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். ஆனால் அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். புதன்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.
இந்தோனேஷியா, பர்மா, சுமத்ரா, கரீபியன் தீவுகள், கொரியா, ஆஸ்திரேலியா, வட அமேரிக்கா போன்ற இடங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படலாம். வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா தேசங்களில் கலவரங்கள் ஏற்பட்டு மறையும். சனியுடன் ராகு இணைந்தும் குரு கேந்திரமும் ஏற்படுவதால் அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். சாதாரண மக்களையும் செல்வந்தனாக்கிவிடும்.
நாட்டில் பல இடங்களில் தெய்வகாரியம், பூஜைகள் விசேஷமாக நடக்கும். தொழில்துறையில் தமிழ்நாடு செழித்து வளரும். அரசாங்கத்திற்கு தலைவலியாக இருந்த பிரச்னைகள் அனைத்தும் அடங்கிவிடும். காவல்துறை மேலும் வலிமையும் முன்னேற்றமும் வசதிகளும் பெற்று நல்ல புகழ் அடையும்.
உயர்பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு இது யோகமான நேரம். உலகில் பல நாடுகள் மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையும். இயற்கை சீற்றம் – பூகம்ப பாதிப்பு ஏற்படும். பல நாடுகளில் புரட்சி வெடிக்கலாம். மேலை நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு தலைவலியான நேரம். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு வரலாம். தீவிரவாதத்தால் பிரச்னைகள் வந்தாலும் அடங்கிவிடும். தங்கம் விலை மேலும் அதிரடியாக உயரும்...
பன்னிரு ராசிகளுக்குமான விரிவான பலன்கள் பகுதிகளாகத் தொடர்ந்து இங்கு வெளியாகும். உரிய இராசிகளின் பெயர்கள் மீது அழுத்திப் பலன்களைக் காண்க...
மேடம்
மிதுனம்
கடகம்
ரிஷபம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
No comments:
Post a Comment