பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக 2004 முதல் 2008 வரை பணியாற்றிய சஞ்சயா பாரு, 'The Accidental Prime Minister : The Making and Unmaking of Manmohan Singh" எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
இப்புத்தகத்தில் மன்மோகன் சிங் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை மட்டுமே ஊடகங்கள் எடுத்துக்கொண்டு இப்போது பேசிவருவதாகவும், இந்த புத்தகம் வேண்டுமென்றே தாமதமாக வெளியிடப்பட்டிருப்பதாகவும் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் புத்தகம் வெளிவரும் நேரத்தை வெளியீட்டாளர்களே தீர்மானிக்கிறார்கள். நான் அல்ல என விளக்கம் அளித்துள்ளார் சஞ்சயா பாரு. இப்புத்தகத்தில், சோனியா காந்தியிடம் மன்மொகன் சிங் சரணாகதி அடைந்துவிட்டதாக ஒரு கட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்மோகன் சிங் தனது இரண்டாவது பிரதமர் பதவிக் காலத்தில் (2009-2014), காங்கிரஸ் கட்சியால் விஷப்பல்லை பிடுங்கிய பாம்பு ஆக்கப்பட்டுவிட்டார். ஆனால் இரண்டாவது தடவையாக பிரதமராகிய போது, தனது நாட்டு நலனுக்கான சேவைக்கும், முயற்சிகளுக்கும் கிடைத்த பலனே தமது வெற்றியென நம்பிவிட்டார்.
நிஜம் அதுவல்ல. பிரதமர் அலுவலக நியமனத்திலும், முக்கிய மத்திய அமைச்சர்கள் நியமனத்திலும் சோனியா காந்தியே முடிவுகளை எடுத்தார். குறிப்பாக நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜியை நியமித்தது, ஆ.ராசாவை அமைச்சரவையில் சேர்த்தது என அனைத்துமே சோனியா காந்தியின் தன்னிச்சையான முடிவுகள் தான். இதில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டிருக்கவில்லை.
அமெரிக்காவுடனான சிவில் அணுச்சக்தி உடன்படிக்கையை இந்தியா செய்து கொண்ட போது ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில், இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்துக்கு இணங்கிவிட்டால் ராஜினாமா செய்யப் போவதாக பிரதமர் மன்மோகன் சிங் மிரட்டியதுடன், பிரதமர் பதவிக்கு வேறு ஆளைப் பாருங்கள் என சோனியா காந்தியிடம் கேட்டுக் கொண்டார் எனவும் சஞ்சயா பாரு இப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இப்புத்தகத்தில் மன்மோகன் சிங் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை மட்டுமே ஊடகங்கள் எடுத்துக்கொண்டு இப்போது பேசிவருவதாகவும், இந்த புத்தகம் வேண்டுமென்றே தாமதமாக வெளியிடப்பட்டிருப்பதாகவும் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் புத்தகம் வெளிவரும் நேரத்தை வெளியீட்டாளர்களே தீர்மானிக்கிறார்கள். நான் அல்ல என விளக்கம் அளித்துள்ளார் சஞ்சயா பாரு. இப்புத்தகத்தில், சோனியா காந்தியிடம் மன்மொகன் சிங் சரணாகதி அடைந்துவிட்டதாக ஒரு கட்டத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்மோகன் சிங் தனது இரண்டாவது பிரதமர் பதவிக் காலத்தில் (2009-2014), காங்கிரஸ் கட்சியால் விஷப்பல்லை பிடுங்கிய பாம்பு ஆக்கப்பட்டுவிட்டார். ஆனால் இரண்டாவது தடவையாக பிரதமராகிய போது, தனது நாட்டு நலனுக்கான சேவைக்கும், முயற்சிகளுக்கும் கிடைத்த பலனே தமது வெற்றியென நம்பிவிட்டார்.
நிஜம் அதுவல்ல. பிரதமர் அலுவலக நியமனத்திலும், முக்கிய மத்திய அமைச்சர்கள் நியமனத்திலும் சோனியா காந்தியே முடிவுகளை எடுத்தார். குறிப்பாக நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜியை நியமித்தது, ஆ.ராசாவை அமைச்சரவையில் சேர்த்தது என அனைத்துமே சோனியா காந்தியின் தன்னிச்சையான முடிவுகள் தான். இதில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டிருக்கவில்லை.
அமெரிக்காவுடனான சிவில் அணுச்சக்தி உடன்படிக்கையை இந்தியா செய்து கொண்ட போது ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில், இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்துக்கு இணங்கிவிட்டால் ராஜினாமா செய்யப் போவதாக பிரதமர் மன்மோகன் சிங் மிரட்டியதுடன், பிரதமர் பதவிக்கு வேறு ஆளைப் பாருங்கள் என சோனியா காந்தியிடம் கேட்டுக் கொண்டார் எனவும் சஞ்சயா பாரு இப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment