கொழும்பிலுள்ள விடுதியொன்றில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஊடகவியலாளர் அமர்வினை நடத்த முயன்ற ஜாதிக பல சேனாவிற்கு அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் தொடர்பில், விசாரணைகளுக்கு வருமாறு பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரை பொலிஸார் அழைத்துள்ளனர்.
பொது பல சேனாவிற்கும், அதன் செயலாளருக்கும் எதிராக ஜாதிக பல சேனாவினால் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காகவே, கலபொட அத்தே ஞானசார தேரரை நாளை சனிக்கிழமை வருகை தருமாறு கொம்பனித்தெரு பொலிஸார் அழைத்துள்ளனர்.
இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் இடையில் ஒற்றுமையையும், இணக்கப்பாட்டினையும் ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜாதிக பல சேனா என்கிற அமைப்பு கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பினை அடிப்படைவாத பௌத்த அமைப்பான பொது பல சேனா அச்சுறுத்தல் விடுத்து நிறுத்தியது.
ஜாதிக பல சேனா அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்கு வட்டரெக்க விஜித்த தேரர், முஸ்லிம் மதபோதகரான மௌலவி ஆர்.எம். நியாஸ் உள்ளிட்டவர்களே ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்தவிருந்தனர். அந்த நிலையில், அங்கு வந்த பொது பல சேனாவின் பிக்குகளும், உறுப்பினர்களும் ஜாதிக பல சேனா ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும், ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்துவதற்கு தமக்கு உரிமையிருப்பதாக ஜாதிக பல சேனா என்கிற அமைப்பு உறுதியாகக் கூறியது. இதனால், வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து, அங்கு வந்த பொலிஸார் பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தணித்தனர். அப்போதும் அது முடியாமல் போனது.
இந்த நிலையில், பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் அங்கு வந்து அச்சுறுத்தல்களை விடுத்து ஊடகவியலாளர் மாநாட்டினை நிறுத்தினர். அத்தோடு, ஜாதிக பல சேனாவினைச் சேர்ந்த பிக்கு வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தல் விடுத்து “முஸ்லிம்களிடம் பணம் வாங்கிக் கொண்டே இந்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு வந்தேன். மற்றும் பௌத்த மதத்திற்கு எதிராக பேசினேன்” என்று தெரிவித்து மன்னிப்புக் கோருமாறு அச்சுறுத்தினார். இதனையடுத்து, விஜித்த தேரரும், அவ்வாறே ஊடகங்களிடம் மன்னிப்புக் கோரினார். இதனையடுத்து, அவர் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொது பல சேனாவிற்கும், அதன் செயலாளருக்கும் எதிராக ஜாதிக பல சேனாவினால் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காகவே, கலபொட அத்தே ஞானசார தேரரை நாளை சனிக்கிழமை வருகை தருமாறு கொம்பனித்தெரு பொலிஸார் அழைத்துள்ளனர்.
இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் இடையில் ஒற்றுமையையும், இணக்கப்பாட்டினையும் ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜாதிக பல சேனா என்கிற அமைப்பு கொழும்பில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பினை அடிப்படைவாத பௌத்த அமைப்பான பொது பல சேனா அச்சுறுத்தல் விடுத்து நிறுத்தியது.
ஜாதிக பல சேனா அமைப்பைச் சேர்ந்த பௌத்த பிக்கு வட்டரெக்க விஜித்த தேரர், முஸ்லிம் மதபோதகரான மௌலவி ஆர்.எம். நியாஸ் உள்ளிட்டவர்களே ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்தவிருந்தனர். அந்த நிலையில், அங்கு வந்த பொது பல சேனாவின் பிக்குகளும், உறுப்பினர்களும் ஜாதிக பல சேனா ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும், ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்துவதற்கு தமக்கு உரிமையிருப்பதாக ஜாதிக பல சேனா என்கிற அமைப்பு உறுதியாகக் கூறியது. இதனால், வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து, அங்கு வந்த பொலிஸார் பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தணித்தனர். அப்போதும் அது முடியாமல் போனது.
இந்த நிலையில், பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் அங்கு வந்து அச்சுறுத்தல்களை விடுத்து ஊடகவியலாளர் மாநாட்டினை நிறுத்தினர். அத்தோடு, ஜாதிக பல சேனாவினைச் சேர்ந்த பிக்கு வட்டரெக்க விஜித்த தேரரை அச்சுறுத்தல் விடுத்து “முஸ்லிம்களிடம் பணம் வாங்கிக் கொண்டே இந்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு வந்தேன். மற்றும் பௌத்த மதத்திற்கு எதிராக பேசினேன்” என்று தெரிவித்து மன்னிப்புக் கோருமாறு அச்சுறுத்தினார். இதனையடுத்து, விஜித்த தேரரும், அவ்வாறே ஊடகங்களிடம் மன்னிப்புக் கோரினார். இதனையடுத்து, அவர் பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment