பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றஞ்சாட்டி சர்வதேச ரீதியில் இயங்கி வரும் 16 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் பெயரிட்டுள்ளமையானது, நாட்டிலுள்ள சிறுபான்மை தமிழர்களின் அமைதியான செயற்பாடுகளைப் கட்டுப்படுத்தும் முயற்சியாக கருத வேண்டியிருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கும் நபர்கள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒத்துழைத்து அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
அத்தோடு, சட்ட விதிகளுக்கு உட்படாத இந்த அமைப்புக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சாட்சியங்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அந்த பெயர்ப்பட்டியலை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கம் இவ்வாறான தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் என்ற பட்டியலை வெளியிட்டதன் ஊடக, நாட்டிற்குள் வருகின்ற நபர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், எந்தவொரு காரணமும் இன்றி தடுத்து வைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
முற்று முழுதாக செயலிழந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இலங்கை அரசாங்கம் தெளிவற்ற மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை பயன்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் குறித்த செயற்பாடானது, சர்வதேச ரீதியில் தொடர்புகளை வைத்துள்ள உள்நாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தண்டனை விதிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கும் நபர்கள் தொடர்பில், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஒத்துழைத்து அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
அத்தோடு, சட்ட விதிகளுக்கு உட்படாத இந்த அமைப்புக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சாட்சியங்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அந்த பெயர்ப்பட்டியலை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கம் இவ்வாறான தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் என்ற பட்டியலை வெளியிட்டதன் ஊடக, நாட்டிற்குள் வருகின்ற நபர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், எந்தவொரு காரணமும் இன்றி தடுத்து வைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
முற்று முழுதாக செயலிழந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இலங்கை அரசாங்கம் தெளிவற்ற மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை பயன்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வலயப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் குறித்த செயற்பாடானது, சர்வதேச ரீதியில் தொடர்புகளை வைத்துள்ள உள்நாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தண்டனை விதிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment