கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் திடீர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வருகிற 15ம் திகதி முதல் 29ம் திகதி வரை மீன்பிடித் தடைக்காலம் என்பதால், இன்று கடைசி முறையாக கச்சத்தீவு அருகே 200 விசைப்படகுகளில் 800 மீனவர்கள் மீன்பிடிக்கச் செனறனர். இவர்களை இலங்கை கடற்படையினர் துரத்தியடித்து, தாக்குதல் நடத்தியதாகத் தெரிய வருகிறது. இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் உடனடியாக கரைத்திரும்பியுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதுக் குறித்த அச்சத்தை வெளியிட்டுள்ளனர். இன்று மாலை மீனவளத்துறை அதிகாரிகள் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் இதுக் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற 15ம் திகதி முதல் 29ம் திகதி வரை மீன்பிடித் தடைக்காலம் என்பதால், இன்று கடைசி முறையாக கச்சத்தீவு அருகே 200 விசைப்படகுகளில் 800 மீனவர்கள் மீன்பிடிக்கச் செனறனர். இவர்களை இலங்கை கடற்படையினர் துரத்தியடித்து, தாக்குதல் நடத்தியதாகத் தெரிய வருகிறது. இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் உடனடியாக கரைத்திரும்பியுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதுக் குறித்த அச்சத்தை வெளியிட்டுள்ளனர். இன்று மாலை மீனவளத்துறை அதிகாரிகள் மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் இதுக் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment