வன்னியினில் கைதுகள் தொடர்கின்ற நிலையினில் கைது செய்யப்பட்டுள்ள இரு முன்னணி பெண் போராளிகள் பற்றிய தகவல்கள் இல்லாதுள்ளதால் அவர்களது குடும்பங்கள் அச்சமடைந்துள்ளன.கைதான குறித்த பெண் போராளிகளுள் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பினில் மூத்த தளபதியாக இருந்தவரென தெரியவருகின்றது.
இலங்கை அரசு அறிவித்துள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பட்டியலில் அவர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையெனவும் கூறப்படுகின்றது.
இதனிடையே வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சசிகரன் தவமலர் (வயது42) சசிகரன் யதுர்சினி (வயது 16) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தவமலரின் கணவன் சசிகரன் மத்தியகிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார். கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியாவில் வைத்து விசாரணை செய்து வருவதாக தெரியவருகின்றது.
இவர்களில் கோபி என இலங்கை அரசு கூறி வரும் நபரின் மனைவி சர்மிளா கஜீபன் (வயது 26) கோபியின் தாயார் மற்றும் ஜெயக்குமாரி மற்றும் மகள் விபூசிகா ஆகியோரென பத்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசு அறிவித்துள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் பட்டியலில் அவர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையெனவும் கூறப்படுகின்றது.
இதனிடையே வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சசிகரன் தவமலர் (வயது42) சசிகரன் யதுர்சினி (வயது 16) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தவமலரின் கணவன் சசிகரன் மத்தியகிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார். கைது செய்யப்பட்ட இருவரையும் வவுனியாவில் வைத்து விசாரணை செய்து வருவதாக தெரியவருகின்றது.
இவர்களில் கோபி என இலங்கை அரசு கூறி வரும் நபரின் மனைவி சர்மிளா கஜீபன் (வயது 26) கோபியின் தாயார் மற்றும் ஜெயக்குமாரி மற்றும் மகள் விபூசிகா ஆகியோரென பத்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment