பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடனான சந்திப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தவிர்த்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்கிற வகையில் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டிருந்த போதும், அதனை முதலமைச்சர் நிராகரித்துள்ளதாக பஷில் ராஜபக்ஷ உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், வடக்கு முதலமைச்சருடனான சந்திப்புக்கான சந்தர்ப்பம் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்புபடாத போதிலும், இந்திய வீட்டுத்திட்டம் விடயத்தில் சில தொடர்புகள் உள்ளன. எனவே, அவ்வாறான விடயங்கள் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடும் தேவை உள்ளது என்று பஷில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்கிற வகையில் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டிருந்த போதும், அதனை முதலமைச்சர் நிராகரித்துள்ளதாக பஷில் ராஜபக்ஷ உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், வடக்கு முதலமைச்சருடனான சந்திப்புக்கான சந்தர்ப்பம் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்புபடாத போதிலும், இந்திய வீட்டுத்திட்டம் விடயத்தில் சில தொடர்புகள் உள்ளன. எனவே, அவ்வாறான விடயங்கள் குறித்து வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடும் தேவை உள்ளது என்று பஷில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment