தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை மீளவும் உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மற்றும் உதவியமை தொடர்பில் கடந்த இரண்டு மாதங்களில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில், 5 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், ஏனையவர்கள் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோஹன கூறியுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 பெண்கள் அடங்குகின்றனர். அவர்களில் 8 பேர் பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கும், சந்தேக நபர்களுக்கும் உள்ள அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த 65 பேரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இருவர் கிளிநொச்சியின் பளை பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமையவே கோபி மற்றும் தேவியர் ஆகியோர் தொடர்பான தகவல் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களில், 5 பேர் விடுவிக்கப்பட்டதாகவும், ஏனையவர்கள் பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளரான அஜித் ரோஹன கூறியுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 பெண்கள் அடங்குகின்றனர். அவர்களில் 8 பேர் பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கும், சந்தேக நபர்களுக்கும் உள்ள அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த 65 பேரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இருவர் கிளிநொச்சியின் பளை பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமையவே கோபி மற்றும் தேவியர் ஆகியோர் தொடர்பான தகவல் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment