
முன்னாள் உயர் படையதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சுவிற்சர்லாந்து தொலைக்காட்சி சேவையொன்று காணொளி ஒன்றை ஒளிபரப்புச் செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் எஸ்.எப்.1 என்னும் தொலைக்காட்சி அலைவரிசையில் இந்த காணொளி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போலியான போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து புலி ஆதரவாளர்கள், எஸ்.எப் 1 அலைவரிசையின் தலைவர் புருலோ எம்ரிக்கை சந்தித்ததன் பின்னர் இந்தக் காணொளி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காணொளி புலிகளின் தேவைக்காக ஒளிபரப்புச் செய்யப்படுவதாக சுவிஸ் வாழ் இலங்கை அமைப்பு எஸ்.எப்.1 தொலைக்காட்சிக்கு தெளிவுபடுத்திய போதிலும் அதனை அந்த தொலைக்காட்சி அலைவரிசை ஏற்றுக்கொள்ள தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:
Post a Comment