8/2/2011 11:58:07 AM
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து ஜெயம் ரவியை இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்ணன் இயக்கத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் விருப்பமாகவே உள்ள நிலையில் வந்தான் வென்றான் ஆடியோ விழாவில் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ஜெயம் ரவி தெரிவித்தார். அவரது விருப்பம் உடனே நிறைவேறும் போல் தெரிகிறது. தற்போது ஆதிபகவான் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி அடுத்து பூலோகம் படத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களுக்குப் பிறகு அவர் கண்ணன் இயக்கத்தில் நடிப்பார் என நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்ணன் கூறிய ஒன் லைன் ஜெயம் ரவிக்குப் பிடித்திருப்பதே இந்த நம்பிக்கைக்கு காரணம்.
No comments:
Post a Comment