இந்திப் படப்பிடிப்பின்போது ஜெய்ப்பூரில் ஒட்டக சவாரி செய்து மகிழ்ந்துள்ளார் நடிகை அசின்.
இந்தியாவின் பிங்க் சிட்டி என்று புகழப்படும் ஜெய்ப்பூருக்கு படப்பிடிப்புக்காக வந்திருந்தார் அசின். போல்பச்சன் எனும் இந்திப் படத்துக்காக அபிஷேக் பச்சனுடன் நடிக்கும் அவர், படப்பிடிப்பு இடைவேளையில், ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ஒட்டக சவாரியை அனுபவித்தார்.
இந்த அனுபவம் குறித்து பின்னர் அசின் பேசுகையில், "படப்பிடிப்புக்காகத்தான் இந்த ஊருக்கு வந்தேன். ஆனால் இயக்குனர் ரோகித்ஷெட்டி, ஜெயப்பூர் பகுதியைச் சுற்றி பார்க்க வருமாறு அழைத்தார். எனக்கும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.
பல்வேறு பகுதிகளுக்குச் சென்றேன். ஒட்டகம் மற்றும் யானையில் சவாரி செய்தும் இடங்களை சுற்றி பார்த்தேன். யானையை விட ஒட்டக சவாரி வித்தியாச அனுபவமாக இருந்தது. ஜெய்ப்பூரில் ஷாப்பிங் செய்ய எக்கச்சக்கமாக உள்ளது," என்றார்.
விட்டால் ராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை பிஆர்ஓ ஆகிவிடுவார் போலிருக்கிறது
இந்தியாவின் பிங்க் சிட்டி என்று புகழப்படும் ஜெய்ப்பூருக்கு படப்பிடிப்புக்காக வந்திருந்தார் அசின். போல்பச்சன் எனும் இந்திப் படத்துக்காக அபிஷேக் பச்சனுடன் நடிக்கும் அவர், படப்பிடிப்பு இடைவேளையில், ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற ஒட்டக சவாரியை அனுபவித்தார்.
இந்த அனுபவம் குறித்து பின்னர் அசின் பேசுகையில், "படப்பிடிப்புக்காகத்தான் இந்த ஊருக்கு வந்தேன். ஆனால் இயக்குனர் ரோகித்ஷெட்டி, ஜெயப்பூர் பகுதியைச் சுற்றி பார்க்க வருமாறு அழைத்தார். எனக்கும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.
பல்வேறு பகுதிகளுக்குச் சென்றேன். ஒட்டகம் மற்றும் யானையில் சவாரி செய்தும் இடங்களை சுற்றி பார்த்தேன். யானையை விட ஒட்டக சவாரி வித்தியாச அனுபவமாக இருந்தது. ஜெய்ப்பூரில் ஷாப்பிங் செய்ய எக்கச்சக்கமாக உள்ளது," என்றார்.
விட்டால் ராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை பிஆர்ஓ ஆகிவிடுவார் போலிருக்கிறது
No comments:
Post a Comment