சகாரா தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய செய்திச்சேனல் தொடக்க விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை வீணாமாலிக்கை, பிரபல அரசியல் தலைவர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
சகாரா குழுமத்தில் இருந்து புதிதாக செய்திச் சேனல் ஒன்று உதயமாகி உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இந்தி செய்திகளை ஒளிபரப்பும் இந்த சேனலை தொடக்கி வைக்க பிரபல பாலிவுட் நடிகை வீணா மாலிக்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார் சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய். இந்த விழாவில் பங்கேற்ற வீணா மாலிக், தனக்கு இது மிகச்சிறந்த தருணம் என்றார். சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் தன்னை சிறப்பு விருந்தினாராக அழைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.
புதிய செய்தி சேனல் தொடக்க விழாவில் பாலிவுட் திரைப்படப் பாடகர் அனுமாலிக், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் பங்கேற்றனர்.
வீணாவைப் பற்றி விழாவில் பங்கேற்ற லாலு பிரசாத் யாதவ் புகழ்ந்து பாராட்டினார். வீணா சிறந்த நடிகை மட்டுமல்ல கவித்துவமான அழகும் கொண்டவர் என்று பாராட்டினார் லாலு. இதை விட ஒரு படி மேலே சென்ற ராம் விலாஸ் பஸ்வான் இந்த தருணத்தில் வீணாவின் வருகை சிறப்பு வாய்ந்ததாகவும், நிகழ்ச்சிக்கு கூடுதல் கவர்ச்சியையும் அளித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment