சென்னை: சினிமா மட்டுமின்றி, அதைத் தாண்டி மேடைகளிலும் முழுவீச்சில் கவனம செலுத்த ஆரம்பித்துள்ளார் இசைஞானி.
கடந்த ஆண்டு சென்னையில் என்றென்றும் ராஜா என்ற தலைப்பில் 5 மணி நேரம் மக்களை தன் இசையால் கட்டிப்போட்ட இளையராஜா, இந்த முறை வெளிநாட்டில் கனடாவின் டொரன்டோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
நிகழ்ச்சிக்குப் பெயர் ‘எங்கேயும் எப்போதும் ராஜா'.
இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் வெள்ளைக் கோட் - சூட் அணிந்து அட்டகாசமாகக் காட்சி தருகிறார் இளையராஜா.
முழுக்க முழுக்க வாத்தியங்களைக் கொண்டு இசைக் கலைஞர்கள் மட்டுமே வாசிக்கும்படி இந்த நிகழ்ச்சி வடிவமைத்துள்ளார் ராஜா. 100 இசைக்கலைஞர்களுடன் செல்லும் அவர், வரும் நவம்பர் 3-ம் தேதி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.
விரைவில் டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வரவிருக்கிறது.
இதன் பிறகு கலிபோர்னியாவிலும் ஒரு நிகழ்ச்சி நடத்துவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி முன் அவர் இரு நிகழ்ச்சிகளை சென்னையில் செய்கிறார். ஒன்று வரும் ஆகஸ்ட் 20-ல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறார்.
அடுத்து வரும் செப்டம்பர் 1-ம் தேதி நீதானே என் பொன்வசந்தம் பட இசைவெளியீட்டில் அந்தப் பட பாடல்களை நேரடியாக மேடையில் இசைக்கிறார்.
No comments:
Post a Comment