நடிகர் அஜீத் குமார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட படங்கள் தான் தற்போது டுவிட்டரை கலக்கிக் கொண்டிருக்கிறது.
இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜீத் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோரை வைத்து பெயரிடப்படாத படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக அஜீத் புது கெட்டப்பில் வருகிறாராம். இதற்காக அவர் நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அஜீத்தை பார்த்த இயக்குனரிடம் அவர் விரைவில் தன்னிடம் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று உறுதியளித்துள்ளார்.
அதன் பிறகு 15 நாட்கள் கழித்து அஜீத்தை பார்த்த இயக்குனர் அசந்துவி்ட்டாராம். தினமும் ஜிம்முக்கு போய் அஜீத் கும்மென்று இருக்கிறார். இதையடுத்து அஜீத் உடற்பயிற்சி செய்யும்போது அதை போட்டோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் விஷ்ணுவர்தன். அந்த போட்டோக்களை பல பிரபலங்களும் ரீடுவீட் செய்து வருகின்றனர். இப்போதைக்கு அந்த போட்டோக்கள் தான் டுவிட்டரைக் கலக்கி வருகின்றன.
அடுத்த செட் போட்டோக்களை 30 நாட்கள் கழி்த்து வெளியிடுவதாக விஷ்ணுவர்தன் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
திரையுலகில் 20 ஆண்டுகள் இருந்தும் இன்னும் அதே அர்ப்பணிப்புடன் இருக்கிறார் அஜீத். 13 அறுவை சிகிச்சைகள் செய்த ஒருவர் தினமும் 6 மணிநேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது சாதாரண விஷயம் அல்ல. அவரது அர்ப்பணிப்பை பார்க்கும்போதெல்லாம் ஆச்சரியமாக உள்ளது என்றார்.
அஜீத் பெரிய தொப்பை வைத்திருக்கிறார், உருண்டுவிட்டார் என்று பலர் நக்கலடித்து வந்தனர். ஆனால் இந்த படத்தைப் பார்ப்பவர்கள் அவரின் உடல்வாகைப் பார்த்து அதிசயிக்கப்போவது உண்மை.
No comments:
Post a Comment