லண்டன்: ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜூலியும் அடுத்த சனிக்கிழமை திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். அதற்காக ரூ. 8.7 கோடி செலவில் திருமண மோதிரங்கள் செய்துள்ளனர்.
ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜூலியும் திருமணமாகாமலேயே பல ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் 3, தத்தெடுத்த குழந்தைகள் 3. ஆக மொத்தம் 6 குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு குழந்தைகள் தொடர்ந்து நச்சரி்த்து வந்ததால் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து அவர்களின் திருமணம் இந்த வார இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த சனிக்கிழமை பிரான்சில் உள்ள அவர்களின் வீட்டுக்கு அருகே இருக்கும் தேவாலயத்தில் வைத்து திருமணம் நடக்கவிருக்கிறது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அவர்கள் திருமண மோதிரத்திற்கு ஆர்டர் கொடுத்து அவையும் ரெடியாகிவிட்டன. ரோஸ் கோல்டால் செய்யப்பட்டு வைரக்கற்கள் பதித்த அந்த மோதிரங்களின் விலை ரூ.8.7 கோடி மட்டுமே.
என்ன விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறதா?
No comments:
Post a Comment