மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் பெற்றோர் பார்ப்பவரைத் தான் திருமணம் செய்து கொள்வாராம்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் காதலர்கள். அவர்கள் பிரிந்துவிட்டாலும் ஒரு வேளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தங்கள் உறவை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்களோ என்று பலர் சந்தேகிக்கின்றனர். காரணம் கேட் மீது சல்லு காட்டும் பாசம், சல்லு மீது கத்ரீனா காட்டும் அக்கறை.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 1.30 மணிக்கு கத்ரீனா நடிகர் ரன்பிர் கபூர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அன்றைய இரவை அவர் ரன்பிருடன் கழித்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கத்ரீனாவுக்கும், ரன்பிருக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து அவரது பாலிவுட் தோழிகள் கூறுகையில்,
கத்ரீனா திரையுலகில் உள்ள யாரையும் மணக்கமாட்டார். அவர் ரன்பிர் கபூரை காதலிப்பதாக சொல்வதெல்லாம் பொய். அவர் ஒரு குடும்ப பெண். அதனால் பெற்றோர் பார்த்து வைப்பவரைத் தான் மணப்பார் என்றனர்.
No comments:
Post a Comment