சென்னை: என் நினைப்பு முழுக்க சினிமாதான். 24 மணிநேரமும் சினிமாவைப் பற்றித்தான் சிந்திக்கிறேன். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்கிறேன் என்கிறார் நடிகர் கருணாஸ்.
அம்பா சமுத்திரம் அம்பானி படத்தை அடுத்து கருணாஸ் சொந்தமாகத் தயாரிக்கும் படம் ரகளைபுரம். ஹீரோவும் அவர்தான். இந்தப் படம் முடிந்துவிட்டது. விரைவில் வெளிவரப் போகிறது.
அடுத்து மேலும் இரு படங்களைத் தயாரிக்கப் போகிறார். இவற்றிலும் ஹீரோவாக நடிக்கிறார்.
முழுநேரமும் சினிமா தயாரிப்பில் குதிக்கத் திட்டமா.. காமெடி வேஷம் பண்ணமாட்டீங்களா, என்று அவரிடம் கேட்டபோது, "ஆமாண்ணே.. நான் முழுநேர சினிமாக்காரன்தான். வேற சைட் பிஸினஸ்கூட கிடையாது.
அதேநேரம், நான் ஹீரோதான்னு சொல்லிக்க விரும்பல. கதைக்கேத்த ரோல்ல நான் நடிப்பேன். காமெடி, ஹீரோன்னாலும் பாக்க மாட்டேன்.
சினிமாவில் சம்பாதித்த காசை வச்சி நான் ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணல. இந்த 'ரீல் எஸ்டேட்'டைத்தான் நம்பறேன். மேல மேல பிலிம் ரோல்தான் வாங்கிக் குவிக்கிறேன். வட்டிக்கு வாங்கித்தான் சினிமா எடுக்கிறேன்.
ஒரு செகண்டுக்கு 24 பிரேம் என்ற கணக்கில் பிலிம் ஓடும்... நான் 24 மணி நேரத்தில் ஒரு செகண்டு கூட சினிமாவைத் தவிர வேறு எதையும் நெனக்கிறதில்லை.
ஆனா ஒரு நம்பிக்கை. செய்யும் விஷயத்தை திருத்தமா நேர்மையா செஞ்சா ஜெயிக்கலாம்," என்றார் கருணாஸ்.
No comments:
Post a Comment