சென்னை: விஜய்யின் துப்பாக்கி படத்தின் தலைப்பு குறித்த வழக்கு மேலும் தள்ளிப் போயுள்ளது. விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
துப்பாக்கி படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் டிசைன்கள் வெளிவந்ததும், கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்துவரும் ரவிதேவன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை 2009-லேயே தாங்கள் பதிவு செய்துவிட்டதாகவும், தங்களது டிசைன், பெயரை ஒத்து துப்பாக்கி தலைப்பும் டிசைன் செய்யப்பட்டுள்ளதால், அதனை தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், வரும் ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு வழக்கைத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
திரைப்படங்களுக்கு தலைப்பு பதிவு செய்தல் தொடர்பாக 1994-95ம் ஆண்டு பிலிம்சேம்பர், தயாரிப்பாளர் கில்டு ஆகியவை நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment