புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடை தேடும் விவாதங்கள் நிகழ்ச்சியில் இளைய தலைமுறையினர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். கபிலன் வைரமுத்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் நடைபெறும் அவலங்களையும், அதற்கான தீர்வுகளையும் அலசுகின்றனர்.
விவாத நிகழ்ச்சிகள் என்றாலே அதில் பங்கேற்பவர்கள் பேசுவதை விட நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அதிகம் பேசுவார்கள். சன் டிவியின் அரட்டை அரங்கம் தொடங்கி, விஜய் டிவியின் நீயா நானா வரை இதற்கு விதி விலக்கில்லை. இவற்றிர்கிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விடை தேடும் விவாதங்கள் நிகழ்ச்சி சற்றே வித்தியாசமானதாக, சுவாரஸ்யமாக இருப்பதாக ரசிகர்களிடையே பரவலாக பேச்சு கிளம்பியுள்ளது.
புதிய தலைமுறையில் ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிமுதல் 10.30 மணிவரை ஒளிபரப்பாகும் இந்த விவாத நிகழ்ச்சிக்கு தற்போது ரசிகர்களின் எண்ணிக்கை கூடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திச் செல்லும் கபிலன் வைரமுத்துவின் பேச்சு பெரும்பாலானவர்களை கவர்ந்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வரும் ஞாயிறுக்கிழமை விடை தேடும் விவாதங்கள் நிகழ்ச்சியில் வாரிசு அரசியல் பற்றி விவாதிக்க இருக்கின்றனர்.
இந்தியாவில் நேரு காலம் தொட்டு தற்போதையை காலம் வரை வாரிசு அரசியல் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைப்பற்றி சூடாகாவும், சுவையாகவும் விவாதிக்கின்றனர் இளைய தலைமுறையினர். ஞாயிறு இரவு நேரம் இருப்பவர்கள் பார்த்து ரசியுங்களேன்.
No comments:
Post a Comment