தான் சினிமா ஹீரோ மட்டுமல்ல.. நிஜத்திலும் ஹீரோதான் என சத்யமேவல ஜெயதே மூலம் நிரூபித்துவிட்டார் ஆமிர் கான் என்று கூறியுள்ளார் சல்மான் கான்.
ஆமிர் கானும் சல்மானும் பாலிவுட்டில் நெருக்கமான நண்பர்கள். ஒருவர் பணி்யை மற்றவர் பாராட்டிக் கொள்வது வழக்கம்.
பெண் சிசுக் கொலை, மருத்து உலக முறைகேடுகள் குறித்து ஆமிர் கான் சமீபத்தில் ஆரம்பித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே நாடு முழுவதும் பெரும் அலையைக் கிளப்பியுள்ளது.
துபாயில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சல்மான்கான், இந்த நிகழ்ச்சி குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "நாட்டின் முக்கியமான பிரச்சினையை துணிந்து கையிலெடுத்துள்ளார் ஆமிர் கான். சமூக மாற்றத்துக்கான ஒரு முதல் நகர்வு இது. தான் நிஜத்திலும் ஒரு ஹீரோதான் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார் ஆமிர். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்," என்றார்.
தனது சத்யமேவ ஜெயதே ஷோவின் ஆரம்பத்தில், சல்மானின் படத்தைக் குறிப்பிட்டு ஆமிர் கான் பாராட்டியது நினைவிரு்கலாம்.
No comments:
Post a Comment