சென்னை: எந்திரன் கதைத் திருட்டு தொடர்பாக கடந்த திமுக ஆட்சியின்போது வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், கடந்த திமுக ஆட்சியில்தான் தனக்கு நீதி கிடைக்கவில்லை, இப்போதைய ஆட்சியிலாவது நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், கதைத் திருட்டு தொடர்பாக சன் டிவி நிறுவன அதிபர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் மறுத்து விட்டது. இதுதொடர்பான மாறன், ஷங்கரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. வழக்கு செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கலாநிதி மாறன், ஷங்கர் தரப்பு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியத் திரையுலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய படம் ரஜினிகாந்த் நடித்து, சன் பிக்சர்ஸ், தயாரித்து, ஷங்கர் இயக்கி வெளியான எந்திரன். இந்தப் படத்துக்காக மெகா பிரமாண்டமாக விளம்பரம் செய்தது சன் டிவி. சன் டிவியின் எந்த சானலைத் திறந்தாலும் எந்திரன் தான்.
ஆனால் இந்தப் படத்தின் கதை என்னுடையது, கதையைத் திருடி விட்டார்கள் என்று கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கிளம்பியபோது இதை விட அதிக பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார் தமிழ்நாடன். அதில், எனது ஜூகிபா கதையை அப்படியே திருடி, ஸ்கிரீன் பிளே செய்து, சினிமா சமாச்சாரங்களான பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், கிராபிக்ஸ் உத்திகள் போன்றவற்றை சேர்த்து எந்திரன் படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கியிருக்கிறார்.
இந்தக் திருட்டுக்கதையை தயாரிப்பாளராக இருந்து படமாக வெளியிட்டிருக்கிறார் கலாநிதிமாறன்.
எந்திரன் படக்கதையை எதனது கதை என்று அறிவிக்க வேண்டும். எனது அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக கதையைத் திருடி படம் எடுத்தற்காக இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று வழக்கில் கோரியிருந்தார் தமிழ்நாடன்.
மேலும், கலாநிதி மாறன், ஷங்கர் ஆகியோர் கூட்டுச் சதி செய்து கதையைத் திருடி சுயலாபம் பார்த்துள்ளனர். எனவே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அப்போதைய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகாரும் கொடுத்தார்.
ஆனால் அப்போது நடந்தது திமுக ஆட்சி. சன் டிவி தரப்பின் மீது கை வைக்க முடியாத நிலையில் காவல்துறை அப்போது இருந்தது. இதனால் புகார் கொடுக்க வந்த தமிழ்நாடனிடம், கலாநிதி மாறன் பெயரை நீக்கினால்தான் புகாரையே பதிவு செய்வோம் என்று காவல்துறை கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து எழும்பூர் பெருநகர கோர்ட்டில் தனி நபர் வழக்கு தொடர்ந்தார் தமிழ்நாடன். இதை விசாரித்த கோர்ட், கலாநிதி மாறனையும், ஷங்கரையும் நேரில் வந்து ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பியது.
அதிர்ச்சி அடைந்த கலாநிதி மாறனும், ஷங்கரும் இதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கி தப்பினர்.
இந்த நிலையில் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்காலத் தடையை காரணம் காட்டிய கலாநிதி மாறன், ஷங்கர் தரப்பு, வழக்கையும் தள்ளுபடி செய்யக் கோரியது.
ஆனால், தாங்கள் இடைக்காலத் தடையை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தமிழ்நாடன் வக்கீல் தெரிவித்தார். அதை ஏற்ற கோர்ட், கலாநிதி மாறன், ஷங்கர் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் வழக்கு செப்டம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், கதைத் திருட்டு தொடர்பாக சன் டிவி நிறுவன அதிபர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் மறுத்து விட்டது. இதுதொடர்பான மாறன், ஷங்கரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. வழக்கு செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கலாநிதி மாறன், ஷங்கர் தரப்பு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியத் திரையுலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய படம் ரஜினிகாந்த் நடித்து, சன் பிக்சர்ஸ், தயாரித்து, ஷங்கர் இயக்கி வெளியான எந்திரன். இந்தப் படத்துக்காக மெகா பிரமாண்டமாக விளம்பரம் செய்தது சன் டிவி. சன் டிவியின் எந்த சானலைத் திறந்தாலும் எந்திரன் தான்.
ஆனால் இந்தப் படத்தின் கதை என்னுடையது, கதையைத் திருடி விட்டார்கள் என்று கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கிளம்பியபோது இதை விட அதிக பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார் தமிழ்நாடன். அதில், எனது ஜூகிபா கதையை அப்படியே திருடி, ஸ்கிரீன் பிளே செய்து, சினிமா சமாச்சாரங்களான பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், கிராபிக்ஸ் உத்திகள் போன்றவற்றை சேர்த்து எந்திரன் படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கியிருக்கிறார்.
இந்தக் திருட்டுக்கதையை தயாரிப்பாளராக இருந்து படமாக வெளியிட்டிருக்கிறார் கலாநிதிமாறன்.
எந்திரன் படக்கதையை எதனது கதை என்று அறிவிக்க வேண்டும். எனது அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக கதையைத் திருடி படம் எடுத்தற்காக இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று வழக்கில் கோரியிருந்தார் தமிழ்நாடன்.
மேலும், கலாநிதி மாறன், ஷங்கர் ஆகியோர் கூட்டுச் சதி செய்து கதையைத் திருடி சுயலாபம் பார்த்துள்ளனர். எனவே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அப்போதைய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகாரும் கொடுத்தார்.
ஆனால் அப்போது நடந்தது திமுக ஆட்சி. சன் டிவி தரப்பின் மீது கை வைக்க முடியாத நிலையில் காவல்துறை அப்போது இருந்தது. இதனால் புகார் கொடுக்க வந்த தமிழ்நாடனிடம், கலாநிதி மாறன் பெயரை நீக்கினால்தான் புகாரையே பதிவு செய்வோம் என்று காவல்துறை கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து எழும்பூர் பெருநகர கோர்ட்டில் தனி நபர் வழக்கு தொடர்ந்தார் தமிழ்நாடன். இதை விசாரித்த கோர்ட், கலாநிதி மாறனையும், ஷங்கரையும் நேரில் வந்து ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பியது.
அதிர்ச்சி அடைந்த கலாநிதி மாறனும், ஷங்கரும் இதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கி தப்பினர்.
இந்த நிலையில் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்காலத் தடையை காரணம் காட்டிய கலாநிதி மாறன், ஷங்கர் தரப்பு, வழக்கையும் தள்ளுபடி செய்யக் கோரியது.
ஆனால், தாங்கள் இடைக்காலத் தடையை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தமிழ்நாடன் வக்கீல் தெரிவித்தார். அதை ஏற்ற கோர்ட், கலாநிதி மாறன், ஷங்கர் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் வழக்கு செப்டம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment