பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க்கின் காரியாலயம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதுவரைக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
எனினும், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒஸ்லோ நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் பிரதமருக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ ஆபத்து ஏற்படவில்லை என நம்புவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தங்கியிருக்கும் இடம் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டாம் என காவல்துறையினர் கோரியதாகவும், இதனால் தங்கியிருக்கும் இடம் பற்றிய தகவல்களை வழங்க முடியாது எனவும் பிரதமர் ஜேன்ஸ் ஸ்டொலன்பெர்க் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தினம் பொது விடுமுறை என்பதனால் சன நெரிசல் குறைவாகக் காணப்பட்டதாகவும், இல்லையெனில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் எனவும் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் நோர்வே முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment