7/20/2011 11:48:35 AM
தமிழில் 'தசாவதாரம்', 'காஞ்சிவரம்', 'மலையன்', 'மாத்தியோசி' படங்களில் நடித்தவர், ஷம்மு என்கிற சிரின் ஷர்மிலி. அவர் நடித்துள்ள 'மயிலு', 'பாலை' படங்கள் விரைவில் ரிலீசாகிறது. இந்நிலையில், திடீரென்று அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஷம்முவின் தாயார் கூறியதாவது: அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில், 'யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழகம்' இருக்கிறது. இங்கு டாக்டர் படிப்பை தொடர்வதற்காக, நடிப்புக்கு முழுக்கு போட்டுள்ளார் ஷம்மு. வெளிநாட்டில் வசிக்கும் நாங்கள், அவள் ஆசைப்பட்டதற்காகவே சென்னை வந்தோம். ஏதோ ஒன்றிரண்டு படத்தில் நடித்தால் போதும் என்று நினைத்தோம். அவளது ஆசை நிறைவேறியது. இனி ஷம்மு நடிக்க மாட்டாள்.
No comments:
Post a Comment