
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுபாதையைப் புனரமைத்துள்ள சிறிலங்கா விமானப்படை நேற்றுத் தொடங்கம் அந்த ஓடுபாதையில் விமானங்களை தரையிறக்கத் தொடங்கியுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட இந்த ஓடுபாதையில் சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் வைஸ் மார்சல் ஹர்ச குணதிலக பயணம் செய்த வை-12 போக்குவரத்து விமானத்தை விமானிகள் விங் கொமாண்டர் சரிக அரநாயக்க, ஸ்குவாட்ரன் லீடர் தர்சன டயஸ் ஆகியோர் நேற்றுக்காலை தரையிறக்கினர்.
விடுதலைப் புலிகளால் பயிற்சிக்காக தயார்படுத்தப்பட்ட சிறிய ஓடுபாதையே இது என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்றூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த ஓடுபாதை வை 12 போன்ற இலகு ரக விமானங்களும், அனைத்து வகை உலங்குவானூர்திகளும் தரையிறங்கும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment