அவன் இவனுக்குப் பிறகு ஆர்யாவின் அடுத்த ரிலீஸ் லிங்குசாமியின் வேட்டை. ஆனால் வேட்டைக்குப் பிறகு வேறு புதிய படங்களையே ஒப்புக் கொள்ளவில்லை ஆர்யா. இடையில் அவர் கையெழுத்திட்ட மணிரத்னம் படமும் ட்ராப்பாகிவிட்டது.
ஆர்யாவின் இந்த அமைதிக்குக் காரணம் செல்வராகவன் படத்தில் அவர் சத்தமில்லாமல் ஒப்பந்தமாகிவிட்டதுதானாம்.
இந்தப் புதிய படம் குறித்து விவாதிக்க இருவரும் பல முறை சந்தித்துப் பேசியுள்ளனர், கடந்த வாரத்தில் மட்டும்.
இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கக் கூடும் என்கிறார்கள். இடையில் செல்வராகவன் அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்குப் படம் இயக்குவதாகவும் செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment