7/22/2011 12:25:58 PM
தற்போது தன்னுடைய தம்பி தனுஷை வைத்து ‘இரண்டாம் உலகம்’ படத்தின் ஷூட்டிங்கை படுவேகமாக நடத்தி வரும் செல்வராகன் தனது அடுத்த படத்தில் ஆர்யாவுடன் கைகோர்க்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அவன் இவனுக்குப் பிறகு ஆர்யாவின் அடுத்த ரிலீஸ் லிங்குசாமியின் வேட்டை. ஆனால் வேட்டைக்குப் பிறகு வேறு புதிய படங்களையே ஒப்புக் கொள்ளவில்லை ஆர்யா. இடையில் அவர் கையெழுத்திட்ட மணிரத்னம் படமும் ட்ராப்பாகிவிட்டது. இதனையடுத்து ஆர்யா செல்வராகவன் படத்தில் சத்தமில்லாமல் ஒப்பந்தமாகிவிட்டதுதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கக் கூடும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment