'நாயகன்' படத்தில் வில்லனாக நடித்த ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே. பிரசாத் (81) சென்னையில் நேற்று காலமானார். 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் கமலுக்கு அப்பாவாக நடித்தவர், ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத் (81). சிவகுமார் நடித்த 'அன்னக்கிளி', 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி', 'உறவு சொல்ல ஒருவன்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சென்னையிலுள்ள வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி உஷா, மகன் மாலா, மகன் ராஜீவ் பிரசாத் உள்ளனர். இவர்களில் ராஜீவ் பிரசாத், கன்னடத்தில் சில படங்கள் இயக்கியுள்ளார்.
'நாயகன்' படத்தில் ரெட்டி சகோதரர்களில் ஒருவராக நடித்த ஆர்.என்.கே.பிரசாத், ரஜினியுடன் 'தம்பிக்கு எந்த ஊரு?' சரத்குமாரு டன் 'வேடன்', விஜயகாந்துடன் 'பதவிப் பிரமாணம்' உட்பட தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பிரசாத்தின் தந்தை ஆர்.நாகேந்திர ராவ், பழம்பெரும் நடிகர். கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் 'அபூர்வ சகோதரர்கள்', 'ஜாதகம்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில், பெசன்ட் நகர் மின் மயானத்தில் பிரசாத்தின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
'நாயகன்' படத்தில் ரெட்டி சகோதரர்களில் ஒருவராக நடித்த ஆர்.என்.கே.பிரசாத், ரஜினியுடன் 'தம்பிக்கு எந்த ஊரு?' சரத்குமாரு டன் 'வேடன்', விஜயகாந்துடன் 'பதவிப் பிரமாணம்' உட்பட தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பிரசாத்தின் தந்தை ஆர்.நாகேந்திர ராவ், பழம்பெரும் நடிகர். கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் 'அபூர்வ சகோதரர்கள்', 'ஜாதகம்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில், பெசன்ட் நகர் மின் மயானத்தில் பிரசாத்தின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment