மாலைதீவின் முன்னாள் ஜனா திபதி மொஹமட் நiட் ஆட்சியைத் தான் கவிழ்க்க வில்லையெனத் தெரிவித்திருக்கும் மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹீட், இதுதொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் பட்சத்தில் அதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னணியில் சதி இருப்பதாகவும், ஆயுத முனையில் வழங்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே தான் பதவி விலகியதாகவும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நiட் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் தற்போதைய ஜனாதிபதி இருப்பதாகவும் நiட் குற்றஞ்சாட்டியிருந்தார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் மாலைதீவின் ஜனாதிபதி வாஹீட், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டால் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவிருப்பதாகவும் கூறியுள்ளார். தற்பொழுது ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் சட்டபூர்வமானது என்றும் புதிய மாலைதீவு ஜனாதிபதி, சில தினங்களுக்கு முன்னர் மாலைதீவுக்குச் சென்றிருந்த அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்.ஓ.பிளேக்கிடம் கூறியுள்ளார்.
மாலைதீவில் தேர்தலை முற்கூட்டியே நடத்துமாறு பதவி விலகிய நiட் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், தேர்தல் நடத்துவதற்கு ஒருவருட காலம் இருக்கும் நிலையில் முற்கூட்டியே தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது என்பதை மாலைதீவிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் தன்னிடம் எடுத்துக் கூறியதாக மாலைதீவு சென்றிருந்த ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்பொழுது தேர்தலை நடத்துவதற்கான பாதுகாப்புச் சூழ்நிலை இல்லையென்றும் கூறப்பட்டிருப்பதாக பிளேக் குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் மாற்றம் அமெரிக்கா வின் விசேட பிரதிநிதியாக பிளேக் மாலைதீவு சென்று திரும்பிய நிலையில் நேற்றையதினம் புதிய அரசாங்கத்தின், புதிய அமைச்சரவையை வாஹீட் நியமித்தார். தேசிய ஒற்றுமை என்ற கொள்கையின் கீழ் பல்வேறு கட்சிகளை உள்ளடக்கியதாக 7 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அவர் நியமித்துள்ளார். இந்த அமைச்சரவையில் முன்னாள் ஜனாதிபதி நiட்டை எதிர்த்துப் பேசியவர்களுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அமைச்சரவையில் முன்னாள் இராணுவ அதிகாரி மொஹமட் நஜிம் என்பவருக்குப் பாதுகாப்பு அமைச்சு வழங்கப்பட்டிருப்பதுடன், சட்டத்தரணி மொஹமட் ஜீலில் உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், முதல்முறையாக மாலைதீவின் சட்டமா அதிபராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment