தமிழில் 'அழகிய தீயே', 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி', 'மாயக்கண்ணாடி', 'பாசக்கிளிகள்' உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை நவ்யா நாயர். இரு வருடங்களுக்கு முன், சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறினார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான். குழந்தையை கவனிப்பதற்காக தற்காலிகமாக நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த நவ்யா நாயர், மீண்டும் மலையாளத்தில் நடிக்க வந்துள்ளார். 'சீன் ஒண்ணு நம்மோட வீடு' என்ற படத்தில் லால் மனைவியாக நடிக்கும் அவர், அடுத்த மாதம் இதன் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார்.


No comments:
Post a Comment