தற்போது, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் மாற்றான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படம் முடிந்ததும் ஹரி இயக்கும் சிங்கம் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்.
இதற்கிடையே ரன், இயக்குநர் லிங்குசாமி சூர்யாவுக்காக ஒரு ஆக்ஷன் கதையை உருவாக்கியுள்ளார். இந்தக் கதையை சமீபத்தில் சூர்யாவைச் சந்தித்துக் கூறியுள்ளார் அவர்.
லிங்குசாமி சொன்ன கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டதால் உடனே ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிங்கம் 2 முடிந்ததும் சூர்யாவும், லிங்குசாமியும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.
No comments:
Post a Comment