வாலு படத்தின் ட்ரெய்லரில் தனுஷை தாக்குவது போல் வசனம் வைத்திருந்தார் சிம்பு. இப்போது அந்த வசனத்தை நான் எழுதவில்லை, இயக்குனர் விஜய் எழுதியது என்று அறிமுக இயக்குனர் விஜய் சந்தருக்கு ஆப்பு வைத்திருக்கிறார்.
தனுஷ் ஒரு படத்தில் கதாநாயகியிடம், என்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்காது பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும் என்பார். வாலு ட்ரெய்லரில் ஹன்சிகா சிம்புவைப் பார்த்து, ஒருசில பசங்களை பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும்,
உன்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்கும் என்பார். இது மீடியாவில் பிளாஷாகி சிம்பு, தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் சிண்டை பிடிக்கும் அளவுக்கு மோசமானது.
இந்நிலையில்தான் தனது சூப்பர் பல்டியை போட்டிருக்கிறhர் சிம்பு. எனக்கும் அந்த வசனத்துக்கும் சம்பந்தம் கிடையாது, இயக்குனர் விஜய் எழுதியது அந்த வசனம் என்றிருக்கிறார். ஐயோ பாவம்... இந்தக் கொய்ந்தைக்கு எதுவுமே தெரியாது.
No comments:
Post a Comment