பிரித்தானியாவுக்கு சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் வரவை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கெத்ரோ விமானநிலையத்தில் ஒன்றுகூடிய ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ராஜபக்சவை பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதை பிரித்தானிய அரசாங்கத்துக்கு வலியுறுத்தும் முகமாகவே பல நூறு ஈழத் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதற்கு அடுத்த நாள், சிறிலங்கா அதிபர் ராஜபக்ச தனது பாரியாரான சிராந்தியுடன் பிரித்தானியாவைச் சென்றடைந்தார். சிறிலங்கா எயார்வெய்ஸ் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறிலங்கா அதிபர் பிரித்தானியாவை வந்தடையவுள்ளார் என்ற செய்தி தம்மை வந்தடைந்ததாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் திங்கட்கிழமை காலை, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் லண்டன் Park Lane Hilton விடுதியில் ஆறு மணியாலத் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானியா வந்தடையவுள்ள மகிந்த ராஜபக்சவை எதிர்த்தும், அவரைக் கைது செய்யுமாறு கோரியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து பிரித்தானியா வாழ் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழாவில் கலந்துகொள்வதற்காகவே சிறிலங்கா அதிபர் பிரித்தானியா வருகை தருகின்றார் என ஆதரவு தெரிவித்தும் இச்சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா அதிபர் பிரித்தானியாவில் நின்றிருந்த காலப்பகுதியில், பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுநலவாய வர்த்தக சபையில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த ராஜபக்சவின் உரையை நிறுத்துவதற்காக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று, பிரித்தானிய மகாராணியாருடன் பொதுநலவாய செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட மதிய விருந்துபசாரா நிகழ்வு முடிந்து சில மணித்தியாலங்களின் பின்னர் இரண்டாவது ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி மேற்கொண்ட இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சிறிலங்கா அதிபரது பிரதான உரை நிறுத்தப்பட்டது. எனினும், பிரித்தானிய மகாராணியாருடனான விருந்துபசாரத்தில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டதாக லண்டன் கார்டியன் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபருடன் பிரித்தானிய மகாராணியார் எலிசபெத் ஒரு சில வார்த்தைகள் பேசுவதுடன், கைலாகு கொடுப்பதை ஒளிப்படங்கள் மூலம் பார்வையிட முடிகின்றது.
பிரித்தானிய காவற்துறை தலைமை நிலையம் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்ததாக இதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், நோர்வே, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் உள்ளடங்கலாக பல நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடாவில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தின் முன்னால் கூடிய பல நூறு தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு வருகை தந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் எனக் கோரி கனேடிய மற்றும் பிரித்தானியக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட 140,000 தமிழ் மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், இதனால் 'சிறிலங்காவைப் புறக்கணித்து' போர்க் குற்றவாளியான ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் எனவும் கோரி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காளைக் கொம்பொன்றைக் காவியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர், கனடாவிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தின் முன் நின்றவாறு 'ராஜபக்ச ஒரு போர்க் குற்றவாளி' என உரத்துக் கத்தினார்.
2009ல் சிறிலங்காவில் இடம்பெற்ற அதன் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த கால மீறல்களை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய மகராணியாரின் வைரவிழாவில் ராஜபக்ச கலந்து கொண்டதானது உண்மையில் 'எதிர் விளைவை' உண்டுபண்ணுவதாக புதனன்று ஒழுங்குபடுத்தப்பட்ட கனேடிய தமிழர்களின் தேசிய சபையின் ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
"அண்மையில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவில் தற்போது தொடரப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், சிறிலங்காவை எதிர்த்து தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பொதுநலவாய அமைப்பின் தலைமையானது பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழாவில் கலந்துகொள்ளுமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமையானது, ஏனைய பொதுநலவாய அமைப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதாகவே கருதப்படுகிறது" என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கனேடிய தமிழர் தேசிய சபையின் பேச்சாளர் கிருஸ்ணா சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தொடர்ந்தும் வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிறிலங்கா அதிபர் 2016ல் மேற்கொள்ள வேண்டிய பொதுத் தேர்தலை பிற்போடுவார் எனத் தான் நம்புவதாகவும் கனேடிய தமிழர் தேசிய சபையின் ஒன்றாரியோவுக்கான தலைவர் அருள் நல்லையா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தற்போது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியில் இருப்பதால் அவரையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் எதிர்ப்பதற்கான வலுவான எதிர்க்கட்சி ஒன்று சிறிலங்காவில் இல்லை என அருள் நல்லையா சுட்டிக்காட்டினார். 'மிகப் பயங்கரமான, கொடிய செயல்கள் பல சிறிலங்காவில் தொடரப்படுகின்றன' எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரத்தில் பிரித்தானியாவால் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் சிறிலங்கா அதிகாரிகளால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் உறுதிபட தெரிவித்த சம்பவங்களை லண்டன் கார்டியன் பிரசுரித்தது.
தான் 17 நாட்கள் வரை தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கப் படைகளால் துன்புறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் குறிப்பிட்டுள்ளார். இவரது உடலில் மின்சாரக் கம்பிகள் பாய்ச்சப்பட்டு, கணுக்கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"நான் இங்கே நம்பிக்கையுடன் வந்தேன். எனது பிரச்சினையை பிரித்தானிய அரசாங்கமானது நியாயமான வகையில் ஆராயும் என எதிர்பார்த்தேன். நான் எனது ஆவணங்கள் முழுவதையும் சமர்ப்பித்தும் பிரித்தானியா என்னை மீண்டும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிவிட்டது. நான் மீண்டும் துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்" என பாதிக்கப்பட்ட ஹரி என்கின்ற தமிழ் இளைஞன் தெரிவித்துள்ளார்.
செய்தி வழிமூலம் : Andrew Moran - International Politics Examiner
மொழியாக்கம் : நித்தியபாரதி
எனினும், ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதற்கு அடுத்த நாள், சிறிலங்கா அதிபர் ராஜபக்ச தனது பாரியாரான சிராந்தியுடன் பிரித்தானியாவைச் சென்றடைந்தார். சிறிலங்கா எயார்வெய்ஸ் விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறிலங்கா அதிபர் பிரித்தானியாவை வந்தடையவுள்ளார் என்ற செய்தி தம்மை வந்தடைந்ததாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் திங்கட்கிழமை காலை, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் லண்டன் Park Lane Hilton விடுதியில் ஆறு மணியாலத் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானியா வந்தடையவுள்ள மகிந்த ராஜபக்சவை எதிர்த்தும், அவரைக் கைது செய்யுமாறு கோரியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து பிரித்தானியா வாழ் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழாவில் கலந்துகொள்வதற்காகவே சிறிலங்கா அதிபர் பிரித்தானியா வருகை தருகின்றார் என ஆதரவு தெரிவித்தும் இச்சிங்களவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா அதிபர் பிரித்தானியாவில் நின்றிருந்த காலப்பகுதியில், பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொதுநலவாய வர்த்தக சபையில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த ராஜபக்சவின் உரையை நிறுத்துவதற்காக ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று, பிரித்தானிய மகாராணியாருடன் பொதுநலவாய செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட மதிய விருந்துபசாரா நிகழ்வு முடிந்து சில மணித்தியாலங்களின் பின்னர் இரண்டாவது ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி மேற்கொண்ட இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சிறிலங்கா அதிபரது பிரதான உரை நிறுத்தப்பட்டது. எனினும், பிரித்தானிய மகாராணியாருடனான விருந்துபசாரத்தில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டதாக லண்டன் கார்டியன் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபருடன் பிரித்தானிய மகாராணியார் எலிசபெத் ஒரு சில வார்த்தைகள் பேசுவதுடன், கைலாகு கொடுப்பதை ஒளிப்படங்கள் மூலம் பார்வையிட முடிகின்றது.
பிரித்தானிய காவற்துறை தலைமை நிலையம் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்ததாக இதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், நோர்வே, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் உள்ளடங்கலாக பல நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடாவில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தின் முன்னால் கூடிய பல நூறு தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு வருகை தந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் எனக் கோரி கனேடிய மற்றும் பிரித்தானியக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட 140,000 தமிழ் மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், இதனால் 'சிறிலங்காவைப் புறக்கணித்து' போர்க் குற்றவாளியான ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் எனவும் கோரி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காளைக் கொம்பொன்றைக் காவியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர், கனடாவிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தின் முன் நின்றவாறு 'ராஜபக்ச ஒரு போர்க் குற்றவாளி' என உரத்துக் கத்தினார்.
2009ல் சிறிலங்காவில் இடம்பெற்ற அதன் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த கால மீறல்களை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய மகராணியாரின் வைரவிழாவில் ராஜபக்ச கலந்து கொண்டதானது உண்மையில் 'எதிர் விளைவை' உண்டுபண்ணுவதாக புதனன்று ஒழுங்குபடுத்தப்பட்ட கனேடிய தமிழர்களின் தேசிய சபையின் ஆர்ப்பாட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
"அண்மையில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவில் தற்போது தொடரப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், சிறிலங்காவை எதிர்த்து தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பொதுநலவாய அமைப்பின் தலைமையானது பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழாவில் கலந்துகொள்ளுமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமையானது, ஏனைய பொதுநலவாய அமைப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதாகவே கருதப்படுகிறது" என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கனேடிய தமிழர் தேசிய சபையின் பேச்சாளர் கிருஸ்ணா சரவணமுத்து தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தொடர்ந்தும் வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிறிலங்கா அதிபர் 2016ல் மேற்கொள்ள வேண்டிய பொதுத் தேர்தலை பிற்போடுவார் எனத் தான் நம்புவதாகவும் கனேடிய தமிழர் தேசிய சபையின் ஒன்றாரியோவுக்கான தலைவர் அருள் நல்லையா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தற்போது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியில் இருப்பதால் அவரையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் எதிர்ப்பதற்கான வலுவான எதிர்க்கட்சி ஒன்று சிறிலங்காவில் இல்லை என அருள் நல்லையா சுட்டிக்காட்டினார். 'மிகப் பயங்கரமான, கொடிய செயல்கள் பல சிறிலங்காவில் தொடரப்படுகின்றன' எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரத்தில் பிரித்தானியாவால் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்கள் சிறிலங்கா அதிகாரிகளால் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் உறுதிபட தெரிவித்த சம்பவங்களை லண்டன் கார்டியன் பிரசுரித்தது.
தான் 17 நாட்கள் வரை தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கப் படைகளால் துன்புறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் குறிப்பிட்டுள்ளார். இவரது உடலில் மின்சாரக் கம்பிகள் பாய்ச்சப்பட்டு, கணுக்கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"நான் இங்கே நம்பிக்கையுடன் வந்தேன். எனது பிரச்சினையை பிரித்தானிய அரசாங்கமானது நியாயமான வகையில் ஆராயும் என எதிர்பார்த்தேன். நான் எனது ஆவணங்கள் முழுவதையும் சமர்ப்பித்தும் பிரித்தானியா என்னை மீண்டும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிவிட்டது. நான் மீண்டும் துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்" என பாதிக்கப்பட்ட ஹரி என்கின்ற தமிழ் இளைஞன் தெரிவித்துள்ளார்.
செய்தி வழிமூலம் : Andrew Moran - International Politics Examiner
மொழியாக்கம் : நித்தியபாரதி
No comments:
Post a Comment