ஹூஸ்டன்: பாரதி கலைமன்றத்தின் சார்பில் கிரேஸி மோகனின் சாக்லெட் கிருஷ்ணா நாடகம் இன்று நடைபெறுகிறது.
ஹுஸ்டன் ஸ்டெல்லா லிங்க் சாலையில் உள்ள எமரி/வெய்னெர் பள்ளி அரங்கத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடக்கிறது. கிரேஸி மோகனுடன் அவரது தம்பி மாது பாலாஜி மற்றும் குழுவினர் நடிக்கிறார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக மேடையேறியது 'சாக்லெட் கிருஷ்ணா'. கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி சென்னை நாரத கான சபாவில் 400 வது காட்சி நடந்தது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே அடுத்த நூறாவது காட்சி அரங்கேறுவது குறிப்பிடத்தக்கது.
ஹூஸ்டன் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பிற மாகாணத்திலிருந்தும் ரசிகர்கள் டிக்கெட்டுகள் கேட்பதாக பாரதி கலை மன்ற தலைவர் டாக்டர். ஜி.என். பிரசாத் தெரிவித்தார்.
ஏப்ரல் 13 ம் தேதி கனெக்டிகடில் ஆரம்பித்து இது வரை 23 அரங்கு நிறைந்த காட்சிகள் அமெரிக்கா முழுவதும் நடைபெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஜூன் 10 ம் தேதி டல்லாஸில் வைலி ஹைஸ்கூல் அரங்கத்தில் 501 தடவையாக சாக்லெட் கிருஷ்ணாவை அரங்கேற்றி விட்டு கிரேஸி மோகன் குழுவினர் தமிழகம் திரும்புகின்றனர்.
பாரதி கலை மன்றம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கலை, இலக்கிய, நடனம், இசை சார்ந்த நிகழ்ச்சிகளை ஹூஸ்டன் தமிழர்களுக்கு வழங்கி வருகிறது.
No comments:
Post a Comment