ஹிராந்துருகோட்டே ரத்கித பிரதேசத்தில் இரண்டரை வயது குழந்தையை வெண் சுருட்டால் (சிகரட்டினால்) சுட்டு காயப்படுத்திய இளைஞனை கைதுசெய்ய பொலிஸார் தேடுதலை ஆரம்பித்துள்ளனர்.குழந்தையின் முகத்தில் காணப்பட்ட காயங்களை அடுத்து இதுகுறித்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும், எனினும் அந்த இளைஞன் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் முகத்தில் எட்டு இடங்களில் சூட்டுக் காயம் காணப்படுவதாகவும் குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தாயும், குழந்தையும் உற்றார் வீட்டிற்கு நித்திரைக்குச் சென்றிருந்தபோதே இந்த இளைஞன் குழந்தையை சுட்டுள்ளதாகவும் தேடப்பட்டு வரும் இளைஞனுக்கு தற்போது 16 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் முகத்தில் எட்டு இடங்களில் சூட்டுக் காயம் காணப்படுவதாகவும் குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தாயும், குழந்தையும் உற்றார் வீட்டிற்கு நித்திரைக்குச் சென்றிருந்தபோதே இந்த இளைஞன் குழந்தையை சுட்டுள்ளதாகவும் தேடப்பட்டு வரும் இளைஞனுக்கு தற்போது 16 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment