சுண்டிக்குளம் களப்பு பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கிராமமொன்றிலிருந்து வந்த சிறுவர்கள் குறித்த களப்பு பகுதியால் மீன் பிடிப்பதற்கு இறங்கியுள்னர். அதன்போது களப்பில் கிடந்த ஜொனிமிதிவெடி வெடித்துள்ளது.
வெடிப்புச் சம்பவத்தினால் அச் சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்துள்ள சிறுவன் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு சிகிச்சைப் பெற் று வருகிறார்.
விடுதலைப் புலிகளின ா ல் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட இந்த ஜொனிமிதிவெடி மழை காலத்தில் நீரில் அடித்து வரப்பட்டு இக் களப்பில் வீழ் ந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பிலான ஆராய்சியில் இராணுவ விசேட பொறியியல் பிரி வொன்று ஈடுபட்டு வருவதுடன் அப் பகுதி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது போன்ற வெடிப்பு சம்பவங்கள் பல வடக்கு – கிழக்கு பகுதிகளில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment