தானே புயல் நிவாரண நிதிக்கு ஐந்து லட்ச ரூபாயை நயன்தாரா வழங்கினார்.
பிரபுதேவாவுடனான காதல் கான்ட்ரவர்சிக்குப் பிறகு பொது இடங்களுக்கு வருவதை நயன்தாரா தவிர்த்து வந்தார். இப்போது காதல் எனும் மாயையிலிருந்து விடுபட்டிருப்பவர் தெலுங்கிலும், தமிழிலும் தலா ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் முதல்வரை நேரில் சந்தித்தவர் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதிக்கு ஐந்து லட்ச ரூபாய் வழங்கினார்.
சிவகுமார், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று திரையுலகில் நடிகர்கள்தான் அதிகம்பேர் நிவாரண நிதி அளித்துள்ளனர். பிரபல நடிகைகளில் நயன்தாராதான் பர்ஸ்ட்.
நயன்தாரா சகஜநிலைக்கு திரும்பியதற்கான அத்தாட்சியாகவும், அவரது மனிதாபிமானமாவும் இந்த நிதி அளிப்பைச் சொல்லலாம்.
வார்ம் வெல்கம் மேடம்.
No comments:
Post a Comment