நடிகர் தனுஷ் நடிப்பில், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் '3'. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். புதுமுகம் அனிருத் என்பவர் இசைய மைத்துள்ளார்.
இந்த படத்தின் ஒரு பாடலை கடந்த வாரம் ரிலீஸ் செய்தனர் "வைதிஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி "என்று ஆரம்பிக்கும் இப்பாடலை தனுஷ் எழுதி பாடியிருக்கிறார். தமிழ், ஆங்கிலம் கலந்து எழுதப்பட்டுள்ள இப்பாடல் வெளியான ஒரு வாரத்திற்குள் ளேயே கிட்டத்தட்ட 18 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் விரும்பி கேட்டுள்ளனர்.
தமிழ் மட்டுமல்லாது உலகம் முழுக்க இந்த பாடல் ஒருவித தாக்கத்தை ஏற் படுத்தியுள்ளது. இன்றைய இளைஞர்களை வாய்திறந்து ஒரு பாட்டு பாடு என்றால் அவர்கள் பாடும் முதல்பாடல் கொலை வெறியாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு இந்த பாடல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டது.
ஒருபுறம் இந்த பாடலை பலரும் ஆஹா... ஓஹோ என பாராட்டி வரு கின்றனர். மற்றொருபுறம் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பெண்களை இழிவுபடுத்துவது போல் பாடல் வரிகள் உள்ளன என்று பெண்கள் சங்கத்தினர் கண்டித்தனர். இந்நிலையில் பிரபல இந்தி பாடலா சிரியர் ஜாவித் அக்தரும், இந்த பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மக்கள் உணர்வுகளை அவமதிப்பது போல் வை திஸ் கொலை வெறி பாடல் அமைந்துள்ளது.
எல்லோரும் மன்னனை புகழ்கிறார்கள், ஆனால் மன்னன் நிர்வாணமாக நின்று கொண்டு இருப்பது போல், இப்பாட்டு உள்ளது. மனம் போன போக்கில் இந்த பாடலை பாடியுள்ளார் தனுஷ்.
இளைஞர்களின் இந்த புதிய தேசிய கீதம் மிகச் சாதாரணமாக உள்ளது. பொருத்தமற்றதாக உள்ளது. இதில் எந்தவிதமான லொஜிக்குமே இல்லை என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment