மறைந்த சினிமா உலக ஜாம்பவான் நாகிரெட்டி நூற்றாண்டு விழாவையொட்டி இலவச மருத்துவ முகாம் அவர் நிறுவிய விஜயா மருத்துவமனையில் நடந்தது. படத் தயாரிப்பாளர் ஏவி எம் சரவணன் இந்த முகாமைத் தொடங்கி வைத்தார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த மருத்துவ முகாம் விஜயா மருத்துவமனையில் நாகிரெட்டியின் பிறந்த நாளன்று நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு விழா என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஏவி எம் சரவணன் பேசுகையில், "நாகிரெட்டியின் பல்வேறு சேவைகள் மற்றும் சாதனைகளை நினைவு கூர்ந்தார்.
50 மருத்துவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் 850க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு எக்ஸ் ரே, இசிஜி என அனைத்தும் இலவசமாகவே எடுத்துத் தரப்பட்டது.
நிகழ்ச்சியில் நாகிரெட்டி அறக்கட்டளையின் நிர்வாகி பி வெங்கட்ராம ரெட்டி, சிஇஓ பி பாரதி ரெட்டி, பொது மேலாளர் ராம்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த மருத்துவ முகாம் விஜயா மருத்துவமனையில் நாகிரெட்டியின் பிறந்த நாளன்று நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு விழா என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஏவி எம் சரவணன் பேசுகையில், "நாகிரெட்டியின் பல்வேறு சேவைகள் மற்றும் சாதனைகளை நினைவு கூர்ந்தார்.
50 மருத்துவர்கள் பங்கேற்ற இந்த முகாமில் 850க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்களுக்கு எக்ஸ் ரே, இசிஜி என அனைத்தும் இலவசமாகவே எடுத்துத் தரப்பட்டது.
நிகழ்ச்சியில் நாகிரெட்டி அறக்கட்டளையின் நிர்வாகி பி வெங்கட்ராம ரெட்டி, சிஇஓ பி பாரதி ரெட்டி, பொது மேலாளர் ராம்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment