எங்களுடைய நாட்டில் பலவிதமான அரசியல்வாதிகள் தோ்தல் மூலம் தெரிவு செய்த வாதிகளே மக்களை அடிமைகளாக நடத்தி, தங்கள் அரசியல் பலத்தை நிலைநாட்டுவதிற்கு எனப் பலவிதமான அரசியல்வாதிகள் நம் நாட்டிலும் வாழ்கின்றனர்.
ஆனால் மிகவும் வேதனை தரும் செய்தி தான் இது எனினும் அர்த்தங்கள் எப்படி என்பது ஊடகத்தின் உதவியைத்தவிர மக்களுக்கு எந்த வகையாலும் நன்மை பயக்கப்போவதில்லை.
அந்த வகையில் தமிழ் அரசியல்வாதிகள் என்று சொல்லும்போது, அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தாலும் அதில் தானும் தான் சார்ந்தவர்களுக்கும் ஏதாவது பயன் உள்ளதா.?
என்பதை நன்கு ஆராய்ந்த பின்பே அவர்களின் செயற்பாடுகள் அமையும். அல்லவா..?
அந்த வகையில் திருகோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வராயாதான் விதிவிலக்கானவராக விமர்சிக்கப்படவுள்ளார்.
அவருடைய 56 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருக்கோணமலை பேருந்தெரு விக்கினேசுவரா மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் க.பொ.த உயர்தர மாணவர்கள் 4 பேருக்கு அவருடைய வேதனப் பணத்தில் என்று சொல்கின்றார் அவர் வேலை என்ன ..?
மக்கள் அரசியல்.
அவை யாருடையது என்பதை விட தனது பணத்தையாம் அதைத்தான் இரு சில்லு மிதி வண்டிகளை அன்பளிப்புச் செய்துள்ளாராம்.
இப்படி செய்வது எந்த வகையில் தென்படுகின்றது...?
இந்தச் செயற்பாடு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், எமது அரசியல்வாதி என்ற வகையில் இதிலும் ஒரு உள் நோக்கம், சுயநலம் இருப்பது தெட்டத்தெளிவாக சந்தேகம் உள்ளது அல்லவா...?
சரி நாங்கள் இதை சந்தேகிப்பதின் விம்பத்தையும் பாருங்கள்..
இவ்வாறு இரு சில்லு மிதி வண்டிகளை அன்பளிப்புச் செய்த நகரசபைத் தலைவர்
அங்கு உரையாற்றினார்.
இது தனது பிறந்த நாளை வெகு விமர்சியாக செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அரங்கை நிறப்ப பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர் உதவி ஆட்கள் முன் சிறப்பித்தாராம். அவர் உரை எப்படி இருந்தது தெரியுமா...?
நாம் தேசிய பற்றுள்ளவர்களாக விளங்க வேண்டும்.
நாம் தமிழர் எமது மொழி தமிழ் என்ற எண்ணம் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும்.
நாம் சத்தியத்தின் வழி நடப்போம்.
அது என்றோ ஓர் நாள் எமக்கான பாதையை பெற்றுத்தரும்.
வறுமை வளமின்மைகள் இருப்பினும் அதையும் தாண்டி படைக்கும் சாதனைக்கு சொந்தக்காரர்களாக நீங்கள் மாற வேண்டு்ம்.
வறுமை நிலைக்குப் பயந்து விடாதே
திறமை இருக்கும் மறந்துவிடாதே என்றார் பட்டுக்கோட்டையார்.
இருந்தும் வறுமையிலும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கின்ற எமது மாணவச் செல்வங்களை தூக்கி விடவேண்டிய கடமை நம் எல்லோரிடமும் இருக்கவேண்டும்.
பின்தங்கிய அல்லது ஒதுக்கப்படுகின்ற இனக் குடும்பங்களில் இருந்துதான் உலகம் வியங்கும் மனிதர்கள் உருவாகியிருக்கின்றார்கள்.
அங்கு விளைகின்ற சாதனைக்கு விலை அதிகம்.
ஆகவே மாணவர்களே ..
நீங்கள் சாதனைபடைக்கின்றவர்களாக மாறவேண்டும்.
அத்தகைய பெருமைக்குரிய பதிவுகள் இந்தபாடசாலைக்குண்டு என நான் நினைக்கின்றேன்.
அது செழுமை பெற வேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன் என்றார்.
இப்படி உரை நிகழ்த்தியது தனது பிறந்த நாளில் தான். என்ற போது சரி அதை விடுவித்த மனதுடன் கவனித்தால்..?
இரு சில்லு மிதி வண்டிகளை அன்பளிப்பு செய்ய தேர்வு செய்த அதிபர் இணைந்த ஆசிரிய குழுவில் கல்விக்கு தரம் பார்த்து நான்கு பேருக்கு மட்டும் அன்பளிப்பை செய்தார்.
நிகழ்வு.
உண்மையில் மக்களுக்காகப் பணியாற்றுவதாயின், மாணவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள் வழங்குவதாக இருந்தால் அங்கு சென்று நான்கு மாணவர்களுக்கு உங்கள் அன்பளிப்புக்களை வழங்கியிருக்க வேண்டும்.
அதைவிடுத்து பத்திரிகையாளர்களை அழைத்துப் படங்களுக்குப் முகம் கொடுத்து செய்யும் இவ்வாறான அன்பளிப்புக்கள் சுயநலத்திற்காகச் செய்யப்படும் அன்பளிக்காகவே இருக்கும் அல்லவா...?
உண்மையில் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் அன்பளிப்புச் செய்வதாயின் ஒரு கையால் வழங்குவது மறுகைக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே.
ஆனால் ஊடகங்களுக்கு அறிவித்து, நான்கு துவிச்சக்கர வண்டியுடன் உங்களை விளம்பரப்படுத்தும் அன்பளிப்புக்கள் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை.அத்துடன் பத்திரிகை மற்றும் அனைத்து ஊடகத்தின் கண்ணுக்குள் தன்னை பெரும் தன்மையான அரசியல் வாதி என விளம்பரச்சிரிப்பை விதைப்பது போல் தானே உள்ளது.?
சரி இந்தச்செயலானது தனது பிறந்த நாளில் தான் செய்ய வேண்டுமா..?
எத்தனையோ ஆயிரக்கணக்கில் தமிழின உறவுகள் இறந்து விட்டனர் இன்றும் அவர் எதுகும் இல்லாத அனாதைகளாக தவிக்கினறர். இதை இந்த அரசியல் வாதி அறியாத வெளி நாட்டுக்காரா..?
இப்படி தவிக்கும் உள்ளங்களுக்கு ஒரு நேர உணவுகள் இல்லாது கண்ணீர் விட்டுக்கதறிக்கொண்டு சாகின்றனர்.
இதை இது வரை அறியாத அரசியல் வாதி தன்னம்பிக்கை ஊட்டி விடுகின்றார்.
நாட்டை சுறண்டு வது சிங்களவன் அல்ல தமிழின அரசியல் வாதிகளும் நாட்டில் உள்ள குடிகளை அடக்கி அழிப்பதில் சிங்களவன் என எம் உறவும் நம்பியே ஏமாறுவது காலத்தின் சாபங்களாக சித்திரங்களாகவே வெளி வருகின்றது.
No comments:
Post a Comment