நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 24 பேர் பலியானார்கள். இதனையடுத்து தங்களுக்கு சொந்தமான ஷம்சி விமான தளத்தை 15 நாளில் காலி செய்ய அமெரிக்காவிடம் பாகிஸ்தான் திட்டவட்டமாக கூறி இருந்தது.
இதனையடுத்து ஷம்சி விமான தளத்திற்கு செல்லும் அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அடைத்தது. பாகிஸ்தானின் இத்தகைய செய்கையால் பணிந்த அமெரிக்கா, தன் வசம் இருந்த ஷம்சி விமான தளத்தை காலி செய்ய துவங்கியுள்ளது.
இதற்காக அமெரிக்காவின் விமானம் ஒன்று பாகிஸ்தான் வந்துள்ளது. அந்த விமான தளத்தில் பணிபுரிந்த அமெரிக்கர்கள் அனைவரும் பாதுகாப்புடன் விமானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். எப்.ஐ.ஏ., அதிகாரிகளும் விமான தளத்தில் இருந்தனர். அவர்களும் விரைவில் அங்கிருந்து செல்ல இருக்கிறார்கள்.
இதனால் ஷம்சி விமானதளம் விரைவில் பாகிஸ்தான் வசம் வரும் எனத்தெரிகிறது
No comments:
Post a Comment