அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாளும் மூத்த அதிகாரியான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் வில்லியம் பேர்ன்ஸ் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை சனிக்கிழமை இந்தியா செல்கிறார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுத்துறைச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோருடன் முக்கிய பேச்சுகளை அவர் நடத்தவுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் இந்தியத் தரப்புடன் விரிவாக ஆராய்வர் என்றும், இலங்கையின் அரசியல் போக்குகள் பற்றியும் இதன்போது பேசப்படும் என்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை கொண்டுள்ள அமெரிக்கா, அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுத்துறைச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோருடன் முக்கிய பேச்சுகளை அவர் நடத்தவுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் இந்தியத் தரப்புடன் விரிவாக ஆராய்வர் என்றும், இலங்கையின் அரசியல் போக்குகள் பற்றியும் இதன்போது பேசப்படும் என்றும் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை கொண்டுள்ள அமெரிக்கா, அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
No comments:
Post a Comment