ஐ.தே.கட்சி உட்பூசல் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஐ.தே.க. தலைமைத்துவத்திற்கு தான் போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சி பிரதித் தலைவர் கரு ஜயசூரிய நேற்று அறிவித்துள்ளார். இந்த நிலையில் நாளை (7) நடைபெறவுள்ள கட்சிச் செயற்குழுக் கூட்டத்தில் தலைமைத்து வத்திற்கான தேர்தல் குறித்து ஆராயப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி யாப்பின் பிரகாரம் வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தப்படும். ஒருவருக்கு மேற்பட்டவர்கள் போட்டி யிட்டால் தலைவர் தெரிவிற்கான தேர்தல் நடத்தப்படும் என கட்சி ஊடகப் பேச் சாளர் கயந்த கருணா திலக தினகரனுக்குத் தெரிவித்தார்.
கட்சி செயற்குழுவும் பாராளுமன்ற குழுவும் இணைந்து தலைவரை தெரிவு செய்யும் எனவும் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
தலைவர் பதவிக்குத் தான் போட்டியிடுவதாக ஐ.தே.க. தலைவர் ரணில் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தானும் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக நேற்று அறிவித்தார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் ஐ.தே.க.வை பாதுகாப்பதற்காக தான் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்ததாகவும் கட்சி முக்கியஸ்தர்கள் ஆதாரவாளர்கள் நலன் விரும்பிகள் அமைப்புகள் என பல்வேறு தரப்பினரதும் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த முடிவு தொடர்பில் தனக்கு பல்வேறு தடங்கல்கள் வரலாம் என்று கூறியுள்ள அவர், ஆனால் தலைமைத்துவத் திற்கு போட்டியிடுமாறு பல்வேறு தரப் பினரும் விடுத்த வேண்டுகோளை தான் நிறைவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ரணில் மறுப்பு
இதேவேளை கட்சி தலைமைத்துவத்துக்கு போட்டியிட இருப்பது குறித்து கரு ஜயசூரிய தனக்கு அறிவிக்கவில்லை என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். கட்சி பிரதித் தலைவர்கள், செயலாளர், தேசிய அமைப்பாளர் போன்றோரை தான் நேற்றுக்காலை சந்தித்த போதும் இந்த விடயம் குறித்து அவர் எதுவும் தனக்கு அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார். நாளை நடைபெற உள்ள செயற்குழு கூட் டத்தில் கட்சி தாவிய மொஹான்லால் ஜிரேருவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவ டிக்கை எடுப்பது தொடர்பிலே ஆராயப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவளை கட்சி தலைமைத்துவத்திற் கான தேர்தலுக்கான திகதியை அறிவிக்குமாறு கரு ஜயசூரியவுக்கு ஆதரவான தரப்பினர் கோர உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை கட்சியினுள் தொடரும் உட்பூசலையடுத்து 4 ஐ.தே.க. எம்.பிக்கள் சுயாதீனமாக செயற்பட உள்ளதாகவும் கட்சி தகவல்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment