
புலிகள் அரசை எப்படி துப்பாக்கி வேட்டுகள் மூலம் தாக்குவார்களோ அதனைப்போல தமிழர்கள் வோட்டு (வாக்களித்து) இலங்கை அரசு மீது தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக நெதர்லாந்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி தெரிவித்துள்ளது. நெதர்லாந்தின் உலக வானொலி இவ்வாறன ஒரு செய்தியை தனது தலைப்பாக இட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் விடுதலைப் புலிகளின் வாசனை தெரிவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு தமது நாட்டில் மனித உரிமை மீறப்படவில்லை, யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லை, தமிழர்கள் சம உரிமையோடு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று கூறிவந்தாலும், நடந்து முடிந்த தேர்தல் அவை அனைத்தையும் கிழித்து எறிந்துள்ளது என அவ்வானொலி தெரிவித்துள்ளது.
புலிகள் துப்பாக்கி வேட்டுகள் கொண்டு தாக்குவார்கள் தமிழர்கள் வோட்டுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என அது குறிப்பிட்டுள்ளது பல அர்த்தங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புகளையும், இனச் சுத்திகரிப்புகளையும் அது சுட்டிக்காட்டத் தவறவில்லை. சமாதானத்துக்காவும் மக்களை மீட்கவுமே தாம் போர் புரிந்தோம் என இலங்கை அரசு கூறிவந்தது. அது உண்மை என்றால் மீண்ட மக்கள் ஏன் இலங்கை அரசுக்கு வாக்களிக்கவில்லை என்ற கேள்விகளையும் அவ்வானொலி மேலும் எழுப்பியுள்ளது.


No comments:
Post a Comment