இன்று மாலை சனல்4 தொலைக்காட்சி ஈழப் போர் தொடர்பான சில ஆவணங்களை வெளியிட்டிருந்தது.இராணுவத் தளபது சவேந்திர சில்வா கருத்துத் தெரிவிக்கையில், ராஜபக்ஷவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின்படியே மக்களை சுட்டதாக கூறியிருந்தார்.
ஈழப்போர் இறுதி நாளில் 58வது, 59வது படைகளின் மும்முர படையெடுப்பினாலேயே பயங்கரவாதத்தை முற்றிலும் அழித்ததாக கூறுகின்றார்.
இவ் இறுதிப் போரின் போது காண்போர் எல்லோரையும் சுடுவதற்கு ஒவ்வொரு சிப்பாய்க்கும் உரிமை இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க கருத்துத் தெரிவிக்கையில், எனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான பெருந்திரளான மக்களை கொல்லவில்லை எனவும், தனது பிள்ளைகளும் இலங்கையின் படுகொலைக் களம் ஆவணத் திரைப்படத்தைப் பார்வையிட்டு, இவ் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இப்படியான கொடுமையா நடந்தது என பயந்து, நாங்களும் ஒரு இலங்கைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தோம் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது என கூறியதாக சந்திரிக்கா தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment