தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணாக இந்த ஆவணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆளுநரிடம் கையளித்துள்ளார் என மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆவணங்கள் கையளிக்கப்பட்டதையடுத்து அரச அதிகாரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் வடக்கு மாகாண ஆளுனர் ஈடுபடுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தலில் தாம் அடைந்த தோல்விக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் விக்னேஸ்வரன் கட்டாய ஓய்வில் அனுப்பட்டுள்ளார். வடமாகான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய சம்மேளனத்தினருமே அதிகமாக அரசுக்கு எதிராக தபால் மூலம் வாக்களித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பல கல்வி வலய அதிகாரிகளை இடமாற்றம் செய்துவிட்டு, இதனால் ஏற்படும் வெற்றிடங்களுக்கு யாழ்ப்பாணத்திற்கு பயிற்சி நடவடிக்கைகளுக்காக வந்துள்ள தென்னிலங்கை சிங்களவர்களைக் கொண்டு நிர்வாக சேவை வெற்றிடங்கள் நிரப்பலாம் என்ற யோசனைகளும் இமெல்டாவால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
அதிர்வு


No comments:
Post a Comment