7/27/2011 2:54:14 PM
பிரபு தேவா கூறியது: 'எங்கேயும் காதல்’ படத்தை தொடர்ந்து 'வெடி’ படத்தை இயக்கி வருகிறேன். தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கொல்கத்தாவில் வாழ்கிறது. ஹீரோ விஷால் அங்கு ஒருவரை தேடுகிறார். இதன் பின்னணியில் கதை செல்கிறது. கொல்கத்தா, கதைக்கு ஏற்ற லொகேஷன் மட்டுமல்ல இங்கு படமாக்கப்பட்ட படங்கள் ஹிட்டாகி உள்ளது. விஷாலுடன், சமீரா ரெட்டி, விவேக் முதன்முறையாக இணைகின்றனர். இப்படத்துக்கு நான் நடனம் அமைக்கவில்லை. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அக்ஷய் குமார் நடிக்கும் 'ரவுடி ரத்தோர்’ பட ஷூட்டிங் தொடங்க உள்ளது. மீண்டும் எப்போது நடிக்கப்போகிறீர்கள்? என்கிறார்கள். படத்தை இயக்கும் வேலையே எனக்கு நிறைய டென்ஷனை கொடுக்கிறது. இதில் நடிக்கவும் தொடங்கினால் டபுள் டென்ஷனுக்கு ஆளாகிவிடுவேன்.
No comments:
Post a Comment