
சிறிலங்கா இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காணொளிக் காட்சிகள் மற்றும் ஐ.நா,வின் மூவர் குழு அறிக்கை ஒளிப்படங்கள் அடங்கிய விவரண இறுவட்டுக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலை மற்றும் ஐ.நா,வின் மூவர் குழு அறிக்கை ஆகிய இறுவட்டுகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் உள்ள கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து வழங்கி வருவதுடன், அதுதொடர்பான் விளக்கங்களையும் வழங்கிவருகின்றார்.


No comments:
Post a Comment